tag:blogger.com,1999:blog-61912619486726686702024-02-20T23:12:42.920-08:00அன்பு உள்ளம் அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-33550456096761987662014-03-28T15:56:00.000-07:002017-04-23T12:15:28.204-07:00இப்படியும் ஒரு வெறியா !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguEOK5ZqdtKLbu-x3piywjJbVxZVC8IP1Xcu0cU8Ag_0LeIQM6dtn_7CA_Pr6b6wUa0cyOlLc9hUGqt6hOK7cRh4LeAa7_W7fFgKrKV86UzgKBMXEQBzWh9OFz9LfVqtMRcfLewZN8Pa_a/s1600/Animated-gif-spinning-question-mark-picture-moving.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguEOK5ZqdtKLbu-x3piywjJbVxZVC8IP1Xcu0cU8Ag_0LeIQM6dtn_7CA_Pr6b6wUa0cyOlLc9hUGqt6hOK7cRh4LeAa7_W7fFgKrKV86UzgKBMXEQBzWh9OFz9LfVqtMRcfLewZN8Pa_a/s1600/Animated-gif-spinning-question-mark-picture-moving.gif" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
எண்ணிக் கடக்கும் வாழ்நாளில் இன்னும் எத்தனை காலங்கள் தான் வாழப் போகின்றோமோ தெரியவில்லை அதற்குள் மனிதன் மனிதனாக வாழும் போது தான் தன்னையும் பிறரையும் உணரும் வாய்ப்பினைப் பெறுகின்றான் தன்னை உணர்ந்தவனுக்கே<br />
<a name='more'></a> இத் தரணியில் மதிப்பும் மரியாதையும் உயர்கின்றது .பட்டப் படிப்புப் படித்து முடிப்பதனாலோ அல்லது பணத்தை மட்டும் சம்பாதித்துக் கொள்வதனாலோ அவன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது .நாம் கற்றுக் கொண்ட பாடம் எதுவோ அதையே கடைப்பிடிக்கும் தன்மை முதலில் எங்களுக்குள் இருக்க வேண்டும் .பணம் படைத்தவனுக்கோ பிறருக்கும் உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும் தவிர தான் பெற்ற அறிவையும் பணத்தையும் மூலதனமாகக் கொண்டு பிறரை அழிப்பதற்கும் இம்சிப்பதற்கும் முயற்சிப்பவனை ஒரு போதும் மனிதனாக ஏற்றுக் கொள்ள முடியாது .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பண வெறி என்பது பொதுவாக மனிதர்களுக்குள் உள்ள குணாதிசயங்களில் ஒன்றாகும் .இது எந்த அளவிற்கு மோசமடைகின்றதோ அந்த அளவிற்கு மன பாதிப்புக்களையும் அவலங்களையும் தந்தே தான் தீரும் .தன் தேவைகளுக்கு ஏற்ப செல்வங்களையும் சந்தோசங்களையும் வளர்த்துக் கொள்ளும் மனிதன் மட்டுமே இப் புவியில் மகிழ்ச்சியானதொரு வாழ்வை அனுபவிக்க முடியும். பணம் மட்டுமே வாழ்க்கை என்று கருதுவோர்களின் இல்லங்களில் சந்தோசம் நிலைப்பதில்லை மாறாக சங்கடங்கள் தான் நிலைத்திருக்கின்றது .அதிலும் தன் தாய் தந்தையைப் பேணிக் காக்க மறந்தவர்கள் உடன் பிறந்த சொந்தங்களை உதறித் தள்ளியவர்கள் ,சொத்துக்காக அன்றாடம் சண்டையிட்டு பிரிந்து (வாழ்ந்தவர்கள் )வாழ்பவர்கள் இவர்கள் ஒரு போதும் தம் வாழ்நாளில் உண்மையான சந்தோசத்தை அனுபவித்திருக்க முடியாது அனுபவிக்கவும் முடியாது .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையான சந்தோசம் என்பது நல்ல உணர்வுகளில் தான் தங்கி உள்ளது இதை எம்மில் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம் ! கட்டுப்பாடற்ற மனத்தில் எழும் ஆசைகளினாலும் ஆனந்தத்தினாலும் தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்பவர்கள் தங்களை அறியாமலேயே அந்த நல்ல உணர்வுகளைக் கெடுத்துக் கொள்கின்றார்கள் இதனால் உறவுகளை விட்டுப் பிரிந்தும் நீண்ட காலம் பகைவர்கள் போல் வாழ்ந்தும் மடிகிறார்கள் இந்த வாழ்வினூடாக நாம் பெறக்கூடிய சந்தோசம் தான் என்ன ?..உறவுகள் கூடி இருக்கும் போது கிட்டும் மகிழ்வினை நாம் எப்போதும் தனிமையில் பெற்று விட முடியுமா ?...காணிச் சண்டையும் வேலிச் சண்டையும் களம் இறங்கிய காலங்களில் சொந்த மாமன் ,சித்தப்பன் ,பெரியப்பன் அவர் தம் குடுப்ப உறவினர்கள் அனைவரையும் வளரும் இளம் சந்தியினரான நாம் எவ்வறு அறிந்து கொண்டோம் பகைவர்களாகத் தானே ?..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று சொந்த நாடும் இல்லை வீடும் இல்லை சுடு காட்டினில் தான் வாழுகின்றோம் இதற்கு முன்னர் எப்போதாவது நாம் இது போன்றதொரு சூழ்நிலை வரும் என்பதை அறிந்திருந்தோமா ?..அறியாத காலங்களில் அநியாயமாக எங்கள் உடன் பிறந்த இரத்த உறவுகளின் சாவுக்குக் கூட நாம் காரணமாக இருந்திருக்கின்றோம் என்பதை இப்போது கூட உணர மறுக்கும் சொந்தங்களை நாம் என்னவென்று சொல்வது ?...நம்பிக்கையின் பெயரால் அக்காலத்திலெல்லாம் பலரது சொத்துக்களுக்கு உரிமை கோரும் ஆவனங்களை முறைப்படி எம் முன்னோர்கள் பதிவிட்டுக் கொடுக்காத பட்சத்தில் இன்று நாடு இருக்கும் நிலையில் அந்த சொத்துக்களுக்கு ஆண் வாரிசுகள் உரிமை கோருவதும் இதற்காக மீண்டும் மீண்டும் சண்டையிடுவதும் நியாயமானதொரு செயலா ?..தன் வாரிசுகள் பண மலையில் படுத்து உறங்குகையிலும் உடன் பிறந்த சகோதரியின் சொத்தின் மேல் அதீத நாட்டம் கொண்டு தொடர்ந்தும் போராடும் இவர்களைப் போன்ற மனிதர்கள் வாழும் பூமியில் நின்மதிக்கு வழி கிட்டுமா?....<br />
<br />
பிறக்கும் போதே ஒரு தாயின் வயிற்றில் கூடிப் பிறந்த சொந்தங்களே இவ்வாறு மனிதாபிமானம் அற்று நடக்கும் போது பிறரது செயற்பாடுகளில் நாம் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் ?..தனக்கென ஒரு சொந்த நாடு இருந்தும் அகதியாக வாழும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் இப்படியும் ஒரு போராட்டமா !! இவர்களைப் பொறுத்த வரையில் அண்ணன் ,தம்பி ,அக்கா தங்கை உறவுகளெல்லாம் இனி வரும் காலங்களில் வெறும் உறவு முறையாகத் தான் இருக்க முடியுமா ! ?.......கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்த போதே அற்றுப் போன புரிந்துணர்வுகளும் அன்பும் கண் காணாத தேசத்தில் பிரிந்து வாழும் போது எவ்வாறு தொடர்ந்திருக்கும் ?..!! கேள்விக் குறியாக நிற்கும் எம் மக்களின் வாழ்வில் இழந்த சந்தோசங்களை ஒற்றுமையைக் கட்டி எழுப்ப என்றேனும் ஒரு நாள் அந்த நல்ல காலம் உலகில் தோன்றாதா ?...விஷக் கிருமிகளுக்குப் பயந்து தான் வாழ்ந்த பூமியை விட்டுக் கொடுக்கும் இந்தக் கொடுமையான நிகழ்வினைக் கண்டு பதைக்கும் மனங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா ?...பல லட்சம் உயிர்களைப் பலி கொண்ட ஆநீதிக்கு முற்றுப் புள்ளி கிட்டும் வரைக்கும் இந்த ஓலமும் ஓயப் போவதில்லை என்பது தான் உண்மையோ !!............<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/j1MjW-TAvSM?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
</div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-67993075713454277782014-03-11T19:44:00.000-07:002017-04-23T12:16:39.891-07:00விடை தேடும் கண்கள் .. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHQOdTT982DG0vRblzRQDr_ZItDMqZfxLQgI7mqve2mU1ZGnJysb-d9RBJNZMu6dI_J1Tt39tpvFuGSc4mfpUjmar4pCudt9IdZEzkYJLo4FStB-NMlmv2_LnONDfrP1bqfrH8ii9C4yfY/s1600/fire_in_eye_animation__by_kimeajam-d4yhdea.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="340" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHQOdTT982DG0vRblzRQDr_ZItDMqZfxLQgI7mqve2mU1ZGnJysb-d9RBJNZMu6dI_J1Tt39tpvFuGSc4mfpUjmar4pCudt9IdZEzkYJLo4FStB-NMlmv2_LnONDfrP1bqfrH8ii9C4yfY/s1600/fire_in_eye_animation__by_kimeajam-d4yhdea.gif" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்தப் பிறப்பில எந்தப் பாவத்தைச் செய்தமோ ! மனுஷன் இந்தக் குளிருக்குள்ள வாழவா முடியும்? ! நாளுக்கு நாள் இழவு வீட்டுக்குப் போறதும் இரங்கல் பா பாடுறதுமே வேலையாப் போச்சு .சுன்னாகச் சந்தையில நாலு மரக்கறிய வித்துப் போட்டு வாற வருமானத்தில வாய்கரிசியப் போட்டுக்கொண்டு இருந்தப்போ இருந்த நின்மதி கூட இப்ப இல்லாம போச்சு <br />
<a name='more'></a>இவளுக்கு நான் அப்பவே சொன்னான் வெளி நாடும் வேணாம் ஒரு கத்தரிக்காயும் வேணாம் எண்டு உயிருக்குப் பயந்து இங்க ஓடி வந்தாள் இப்ப என்ன ஆச்சு மாமா எதுக்கு இந்தப் புலம்பல் புலம்புறீங்க ?....சந்தானம் உனக்குச் சொன்னால் எதுவும் புரியாது நீயும் உன்ர அத்தையும் ஒரே மாதிரித்தான் விடு கதையை ...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது சரி மாமா நானும் என்ர அத்தையும் ஒரே மாதிரித்தான் இப்ப அதுவா பிரச்சனை ?...உங்களுக்கு என்ன பிரச்சனை என்று சொன்னால் தானே தெரியும் அத விட்டிற்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறதால என்ன லாபம் ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்படிக் கேளு ! இப்ப லாப நட்டம் தானே பிரச்சனையே .எல்லாப் பிரச்சனையும் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னால எனக்கு வயசாகிப் போயிரும் இருந்தாலும் உன்னட்ட ஒரே ஒரு கேள்வி தான் நான் இப்ப கேக்கப் போகிறன் அந்த ஒரு கேள்விக்கு நீ முறையா பதில் சொல்லீற்றா போதும் இந்தப் புலம்புறது ,கத்துறது ,கதறுறது எல்லாம் ஒரேயடியாக முடிஞ்சிரும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரி கேளுங்க அப்புடி என்ன தான் கேக்கப் போறீங்க கேளுங்க ?...அவசரப் படாத சந்தானம் கேக்க வந்தத இப்ப கேக்காமலா போகப் போறன் ?...நீ உன்ர மனசில என்ன நினைச்சு இருக்கிற இந்த நாடு எங்களுக்கு நிரந்தரம் எண்டு நினைக்கிறியா ?...இப்புடி சட்டெண்டு கேட்டால் எப்புடி பதில் சொல்லுறது மாமா ?...ஒரு வேளை இந்த நாடு எங்களுக்கு நிரந்தரமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் .பிள்ளையள் இந்த நாட்டில படிக்கிறதால இனி அவையின்ர எதிர் காலம் இங்க தானே இருக்கும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஓ ...அது தான் உன்ர பிள்ளையளுக்குத் தமிழ் தெரிஞ்சால் என்ன தெரியாவிட்டால் என்ன என்று விட்டிற்றீரோ ???..!! ஒன்று மட்டும் தெரிஞ்சு கொள் சந்தானம் என்ன தான் வெளி நாட்டுக் காரன் இந்த நாட்டில எங்களையும் மனுசரா மதிச்சு வாழ விட்டாலும் இந்த நாடோ இந்த நாட்டு மொழியோ எங்களுடைய அடையாளம் கிடையாது .காலப் போக்கில இந்த நாட்டில ஒரு பிரச்சனை என்று வந்தாலே போதும் இனத் துவேசம் சும்மா விடாது உன்ர பிள்ளைகளையோ அல்லது உன்ர பேரப் பிள்ளைகளையோ ஓட ஓட விரட்டும் காலமும் வரும் அந்த நேரத்தில தான் எல்லாருக்கும் ஒரு விஷயம் விளங்கும் .என்ன தான் ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் தன் நாடு தன் மக்கள் தன் தாய் மொழி எவ்வளவு முக்கியம் எண்டு .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுக்காக எல்லாத் தமிழனும் உன்ன மாதிரியே இருக்கினம் எண்டு நினைக்காத வேலைக்குப் போறதோட கொஞ்சம் வெளியிலையும் வந்து பார் எங்கட நாட்டு மக்கள் தன் இனத்தினுடைய விடுதலைக்காகவும் கலை கலாச்சாரத்தைப் பேணிப் பாது காப்பதர்க்காவும் எவ்வளவு போராடுகின்றார்கள் என்று ! என்னதான் போத்து மூடிக் கொண்டு போனாலும் மச்சுப் போற எலும்பு மச்சுத் தான் போகும் வெள்ளைக் காரனுக்கு இல்ல எங்களுக்கு .நீயும் உன்ர காலில போட்டிருக்கிற சப்பாத்தும் மலிவு விலை உடுப்பும் இப்புடியே குடும்பப் பொறுப்பில இருந்து விடு படும் என்றால் குறைஞ்சது 55 வயசுக்கெண்டாலும் இருப்ப அது எங்க நடக்கப் போகுது ?....இரவு பகலா பட்டை அடிச்சு வாற காச வீட்டு வாடகைக்கும் வருமான வரிக்கும் ஆசுப்பத்திரிக்கும் குடுத்திற்று விட்டத்தைப் பார்க்கவே சரியாய் இருக்கும் இதில இந்த நாடே கெதி எண்டு கிடக்கவா முடியும் ?...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம்ம நாடு விடுதலை அடைய வேணும் எங்களுடைய சொந்த பந்தங்கள் எல்லாரும் ஒண்ணா வாழ வேணும் எண்டு நின அதையே பிள்ளையளுக்கும் சொல்லி வளத்துக் கொண்டு வா .எனக்கு அடுத்தாற் போல என்னுடைய பரம்பரைய வளத்துக் கொண்டு போறதும் உன்னுடைய கடமை தான் .இந்த நாட்டில இருந்து கொண்டே எங்களுடைய முகவரிகளை நீயில்ல எந்தத் தமிழனும் துலைக்க நினைக்கிறது பாவம் இதனால ஒரு இனமே அழிந்து போகும் தமிழனது இனம் அழியாமல் இருக்க வேணும் என்றால் முதலில் உன் வீட்டில தமிழை மட்டும் பேசு ஆகக் குறைஞ்சது பேச்சுத் தமிழாவது கொஞ்சம் வாழட்டும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்ணைக் கொடுத்ததால மட்டும் இல்ல நான் உனக்கு மாமன் நீ என் சகோதரியின் வயிற்றில் பிறந்தவன் உன்னைத் தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்தவன் நான் என் போல மாமனும் சித்தப்பனும் பாட்டன் பாட்டியும் நீ பெத்த வாரிசுகளுக்கும் தேவை சந்தானம் நான் பேசப் பேச இவ்வளவு நேரமும் மௌனமாக கேட்டுக் கொண்டு நின்றாயே அது தான்ரா நீ எனக்கு காட்டிய மரியாதை அன்பு மூத்தோரை மதிக்கும் பண்பு இதெல்லாம் உன்னுடைய பிள்ளைகளுக்கும் தெரிஞ்சிருக்க வேணும் .உறவு முறையே சொல்லத் தெரியாமல் ஆளையாள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே போனால் காலப் போக்கில கூடப் பிறந்த சகோதரத்தின் பிள்ளைகளும் அன்னியர் போலத் தான் தெரியும் .அதுனால ஒரே வேலையும் வீடும் தான் வாழ்க்கை என்று இல்லாமல் நீயும் சொந்தம் பந்தம் என்று உறவாடி வா பிள்ளையளுக்கும் அந்த உறவு முறைகளைச் சொல்லி வள சந்தானம் வேற்று மொழியில படிச்சாலும் தாய் மொழியைச் சொல்லிக் குடுய்யா எங்க பரம்பர ஆண்ட பூமியில இந்த வித்துக்கள் விருட்சமா வளர வேணும் வளர வேணும் வளர ....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆடிக்கொண்டே இருந்த கதிரை சட்டென நிக்க அருகில் இருந்த தண்ணீர்ச் செம்பு கவுண்டு விழவும் மலைத்துப் போய் நின்ற சந்தானம் ஓடி வந்து பார்க்கும் போது சிரித்த முகத்துடன் எதையோ சாதித்து விட்டுச் செல்லும் மகாத்மாவைப் போல் விடை கொடுத்தார் அந்தத் தேசப் பற்றாளன் அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் தானே நாம் அவசியம் பின்பற்ற வேண்டியவை இதை உணர்ந்த சந்தானம் போன்று இன்னும் எத்தனை எத்தனை உறவுகள் இங்கே வியப்பின் உச்சத்தில் அலைகின்றது !!...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பி .கு :இது ஒரு கற்பனைக் கதையே </div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-50443935473077255492013-11-20T15:21:00.000-08:002017-04-23T12:17:01.706-07:00கார்த்திகைப் பூக்களின் கனவும் நீதானே <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoq1Z1x8kagtaZR6ffRSbZTkgZ-KvmDS0IkbJQHv1NQpmnCf2M9VcaUDXS2tNhxLzpXncxKsWgXXtBjpCTwwp9N7hw4msb0U9aAQNJd5Ov00sLWuJc9kbos_vfqm5xepCmAshrGrAfh0Jl/s1600/dove-animation-1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="318" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoq1Z1x8kagtaZR6ffRSbZTkgZ-KvmDS0IkbJQHv1NQpmnCf2M9VcaUDXS2tNhxLzpXncxKsWgXXtBjpCTwwp9N7hw4msb0U9aAQNJd5Ov00sLWuJc9kbos_vfqm5xepCmAshrGrAfh0Jl/s400/dove-animation-1.gif" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
நாற்று நடும் கைகள் எங்கே ?..</div>
<div style="text-align: justify;">
நல்ல தமிழ்ப் புலமை எங்கே ?...</div>
<div style="text-align: justify;">
பூட்டி வைத்த அறையினுள்ளே </div>
<div style="text-align: justify;">
புதைந்து கிடக்கும் சுதந்திரமே !!!!...<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒற்றையடிப் பாதையிலே </div>
<div style="text-align: justify;">
ஒருவர் பின்னல் ஒருவர் செல்லக் </div>
<div style="text-align: justify;">
கற்றுத் தந்த பாடமெல்லாம் </div>
<div style="text-align: justify;">
களமிறங்கப் பார்க்குதுன்னால் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வட்டமிடும் பருந்திற்கும் </div>
<div style="text-align: justify;">
வழி காட்டும் நரிகளுக்கும் </div>
<div style="text-align: justify;">
அச்சமின்றி நிமிர்ந்த தலை </div>
<div style="text-align: justify;">
அடங்கிடுமோ எந்நாளும் ?...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொட்டு வைத்து வழியனுப்பும் </div>
<div style="text-align: justify;">
பொங்கு தமிழ்க் குலத்தின் நிழல் </div>
<div style="text-align: justify;">
கட்டுப் பாட்டை மீறும் முன்னால் </div>
<div style="text-align: justify;">
காத்து விடு சுதந்திரமே ....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பட்டுப் போன மரத்தடியில் </div>
<div style="text-align: justify;">
பல மரங்கள் தழைத்திருக்கும் </div>
<div style="text-align: justify;">
அவைக்கும் உச்ச நீதி வழங்கிடவே </div>
<div style="text-align: justify;">
ஓடி வா நீ சுதந்திரமே ..... ............ </div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-73372891108702932312013-08-02T18:02:00.001-07:002017-04-23T12:18:06.332-07:00அன்பு உள்ளம் உங்களை வரவேற்கின்றது <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIVJuIqnzlUrkz6IbzGHbK5421D6enG3xvacIrPwnwyDyMxI9_bUdMFHZyn6WKDGOaHeCDQTiT0q28OIf6KrbVGjPByo9R8l7mSmKra91Xfn-RjYHHsrICS9JciWD6VOuqMurzm7lFzZKg/s1600/Cute-Indian-Punjabi-Girl.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="372" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIVJuIqnzlUrkz6IbzGHbK5421D6enG3xvacIrPwnwyDyMxI9_bUdMFHZyn6WKDGOaHeCDQTiT0q28OIf6KrbVGjPByo9R8l7mSmKra91Xfn-RjYHHsrICS9JciWD6VOuqMurzm7lFzZKg/s400/Cute-Indian-Punjabi-Girl.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தாயைப் போல அன்பு செலுத்தக்கூடிய நல்ல இதயங்களைத் தேடித் தேடி ஒரு சிறு பறவையின் <span style="color: blue;">மன வெளிகள்</span> மீண்டும் இங்கே திறந்து வைக்கப் படுகிறது. அன்பு தான் வாழ்வின் இன்ப ஊற்று இதை அறியாதவர்கள் வாழ்வே வெறும் கூற்று .இன்று போய் நாளையும் வருவேன் என்று கூறி எங்கோ பரந்து விரிந்த <br />
<a name='more'></a>தேசத்தில் ,ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் உங்களுடன் உறவாடி மகிழக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக ஏங்கித் தவிக்கும் இந்தப் பிஞ்சு மனத்தையும் கொஞ்சம் மகிழ்விக்க வாருங்கள் உறவுகளே உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றேன் !!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொன்னும் பொருளும் கல்வியும் புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்றே இதயம் கேட்பது என்னமோ அன்பைத்தான் .ஆதலால் சிரித்துப் பேசுவோம் சிந்தை மகிழ்ந்திட கதைகள் சொலுவோம் கவலைகள் மறந்திட .இனி இருக்கும் காலம் முழுவதும் இவளும் உங்கள் சொந்தமென்றே அரவணைத்துச் செல்லுங்கள் .இன்று அறிமுகமானவள் என்றோ ஒரு நாள் உங்களையும் அறிமுகப் படுத்துவாள் அன்பு உள்ளம் நினைத்தால் எதுவும் இங்கே சாத்தியமாகும் :)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: orange;"> </span><span style="color: lime;">உரை முடிந்தது விருந்துண்ணலாம் வாருங்கள்</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0mJHEau9KAPvrX0UP04PV8PaTeaIRKjYetwRzdx_sxQpAzMiyenGEetZExjiGA6ESNSnfciORymIbG-HQv22QzOaBSTDskJsit7-o-Bjx6bz46GQxKO7CkENUp-fJSiLUH_0KqK7UAkhS/s1600/vinayaka_chaturthi_naivedyam-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="376" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0mJHEau9KAPvrX0UP04PV8PaTeaIRKjYetwRzdx_sxQpAzMiyenGEetZExjiGA6ESNSnfciORymIbG-HQv22QzOaBSTDskJsit7-o-Bjx6bz46GQxKO7CkENUp-fJSiLUH_0KqK7UAkhS/s400/vinayaka_chaturthi_naivedyam-1.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCiOq5fYRnzjg8lu2dAptyz8LSrKuW2uUZP2XNp5Zj74oHrVHeTtzGS37c2aLdBjrzwSBLjmLtdmRYBwpCw5kWNR3E9jUxflE3d9RkL3xRv2MXbAtvQhZWy-N4nmWic7xuEJfTQQAR48Um/s1600/books.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="328" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCiOq5fYRnzjg8lu2dAptyz8LSrKuW2uUZP2XNp5Zj74oHrVHeTtzGS37c2aLdBjrzwSBLjmLtdmRYBwpCw5kWNR3E9jUxflE3d9RkL3xRv2MXbAtvQhZWy-N4nmWic7xuEJfTQQAR48Um/s400/books.png" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span style="background-color: lime;">கதை</span> ,<span style="background-color: orange;">கவிதை</span> ,<span style="background-color: red;">அறிமுகம் </span>,<span style="background-color: blue;">அனுபவம் </span></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
தொடர்ந்தும் வாருங்கள் விருந்து பிடித்திருந்தால் என் மனமும் உங்கள் மனமும் இதனால் மகிழ்ந்திருக்கும் .இன்றைய வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் சந்திப்போம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: orange;"> நன்றி </span></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKpCHlQfQ0b4gVeEoGu4QHYERkiZq8kt7-oQ41or8kbWZXI8ByzJiZG7s974ew6HvP7Qz-JKg9ItRS9AzdpK_Crlfp5rvy_JDa8WbISMWbP-eGi5oDMvGQvAljc5ejz1QKvLKk5d0pcoKA/s1600/vanakkam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKpCHlQfQ0b4gVeEoGu4QHYERkiZq8kt7-oQ41or8kbWZXI8ByzJiZG7s974ew6HvP7Qz-JKg9ItRS9AzdpK_Crlfp5rvy_JDa8WbISMWbP-eGi5oDMvGQvAljc5ejz1QKvLKk5d0pcoKA/s1600/vanakkam.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-82537923357789743452012-10-09T17:33:00.000-07:002017-04-23T12:18:30.245-07:00மின்னுவதெல்லாம் பொன் எனத் தகுமா....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj80P4HhZdk4wWHQNogQ7me4Kr_GYbVydt_Hq7T51UlrluyGOmyXvAFAAJndbld3LIFnm7ZhsLi8MR5JbkMa3iXRA4h4ubWO8PL4OQN6bFBlmB1wyFZyyxxSV_X6I8wQc89jzDpYOYrELiL/s1600/maharishi_valmiki.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj80P4HhZdk4wWHQNogQ7me4Kr_GYbVydt_Hq7T51UlrluyGOmyXvAFAAJndbld3LIFnm7ZhsLi8MR5JbkMa3iXRA4h4ubWO8PL4OQN6bFBlmB1wyFZyyxxSV_X6I8wQc89jzDpYOYrELiL/s400/maharishi_valmiki.jpg" width="310" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அற நெறிகளைத் தன் அறிவின் ஆற்றல் கொண்டு ஒருவர் கற்றுக் கொண்டதனாலோ அல்லது அதையே பிறருக்கும் போதிக்கும் வல்லமை பெற்றுக் கொண்டதனாலோ மட்டும் அவர்களை நாம் புனிதர்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது .காரணம் ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக்கக் கூட இருக்கலாம் .ஆனால் மனித உணர்வுகளை மதிக்கத்தக்க நேசிக்கத் தக்க பண்பு<br />
<a name='more'></a> அவனிடம் என்றும் குறையாமல் இருத்தல் வேண்டும் .இவ்வாறு சத்தியம் தவறாத பிறருக்கு உதவும் நற் குணங்கள் நிறைந்த மனிதர்களே நாம் போற்றப்பட வேண்டிய புனிதர்கள் .அசலும் ,நகலும் போட்டியிடும் இவ் உலகில் நாம் முதலில் உணர வேண்டிய விடயம் இதன் உண்மைத் தன்மை ஒன்றினைத்தான் .நாம் பின் தொடரும் பாதைகள் எதுவாக இருப்பினும் எம் பயணம் தொடர்வதற்கு முன்பே சற்றேனும் இதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டும் .தெரிந்துகொள்ள வேண்டும் .செல்லும் இடம் எதுவென அறியாமலே மந்தைகள் போல் எம் குணம் இருக்குமானால் வரும் இன்னல்களுக்கும் நாம் இடமளித்துத்தான் ஆக வேண்டும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போலிகளைக் கண்டு எமாருதலும் அந்த ஏமாற்ற உணர்வுகளோடு பின் நிஜங்களைக் கண்டு மிரழுவதும் மனித பண்பிற்கு ஒப்பற்ற செயலாகும் எதையும் பகுத்தறிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் இருத்தல் வேண்டும் .இந்தப் பகுத்தறியும் தன்மை அற்றுப் போகும் இடத்தில்தான் வீண் விவாதங்கள் வலுப்பெற்றுச் செல்லும் .நான் என்ற ஆணவமும் இந்த இடத்தில்தான் தலை தூக்கும் .இதனால் மனிதன் தன் சுய சிந்தனையை இழக்க நேரிடும் .அவ்வாறு சுய சிந்தனை அற்றுப் பேச்சுத் தொடர்ந்தால் விளைவுகள் எப்போதுமே விபரீதமாகவேதான் முடியும் ஆதலால் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் நாம் பேசுவதற்கு முன்னாலும் அதன் உண்மைத் தன்மையை பூரணமாக அறிந்து தெரிந்து கொண்டு பேச வேண்டும் .</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
நாம் ஏதேனும் ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி தரக் குறைவாக பேசி விட்டுச் செல்வது சர்வ சாதாரணமாக முடிந்த விசயம் ஆனால் இதனால் வரும் இழப்புகளை மட்டும் அத்தனை சுலபமாக பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது .எனவே பேசும் பேச்சில் தெளிவு வேண்டும் .எமக்கு சம்மந்தம் அற்ற விடயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைப்பதைத் தவிர்த்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் .பிறரை இழிவு படுத்தும் வகையில் உள்ள எம் பேச்சுத் திறனை பிறர் கண்டு அருவருக்கும் நிலை வந்து விட்டால் பின் வாழ்நாள் முழுவதும் உங்களை அறிந்தவர்களுக்கும் உங்களுடன் கூடிப் பழகினால் வீண் குழப்பம் வரும் என்ற ஒரு பயம் தன்னை அறியாமலே வந்து விடும் .இதானால் நீங்கள் ஒரு சமூக ஒற்றுமைப்பாடு அற்றவர் என்ற கணிப்பீட்டுக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள் .உங்களால் உங்கள் குழந்தைகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை எல்லாமே பாதிக்கப் படும் .எனவே இனிமையாகப் பேசி இன்பமான வாழ் நாளை உறவுகளோடு சேர்ந்து கலந்து வாழ வழி அறிந்து வாழ்வோம் அன்பு நெஞ்சங்களே !....</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkd-fxIV1fbKYVwWNo0LPNEQwYCV3vYnUtOYYAcX8ToRTcTrbXqKnNf9kcuhfEPucwqQrbKj22mwzAVvlMqNWSknRAL7SEeLDEpGpgWMzf4HH74Q3xfxGx48R_Ti6ZGvn1JgUL1orXDwBp/s1600/personality%2520-%2520thiruvalluvar_07_29_12_842.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="316" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkd-fxIV1fbKYVwWNo0LPNEQwYCV3vYnUtOYYAcX8ToRTcTrbXqKnNf9kcuhfEPucwqQrbKj22mwzAVvlMqNWSknRAL7SEeLDEpGpgWMzf4HH74Q3xfxGx48R_Ti6ZGvn1JgUL1orXDwBp/s320/personality%2520-%2520thiruvalluvar_07_29_12_842.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<span style="color: orange;">வாய்மை எனப்படுவது யாதெனில் </span></div>
<div style="text-align: justify;">
<span style="color: orange;"> யாதொன்றும் தீமை இலாத சொலல் !!!....</span></div>
<div style="text-align: justify;">
</div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-63746570212878398712012-09-27T08:55:00.001-07:002017-04-23T12:18:59.708-07:00செய்வன திருந்தச் செய் !.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சுத்தம் சுகம் தரும் .அதுபோல் வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் மிகுந்த அவதானம் இருக்க வேண்டும். ஒரு செயலை செய்வதற்கு முன் எங்கள் சிந்தனை ஓர் நிலையான இடத்தில் நிற்க வேண்டும் புகழுக்காகவோ அல்லது பிறரை இழிவு படுத்த வேண்டும்<br />
<a name='more'></a> என்ற தவறான நோக்கங்களுடனோ நாம் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. காரணம் எமது வாழ்க்கை என்பது ஒரு நல்ல சமூகத்துடன் பின்னிப் பிணைந்து இருக்க வேண்டும் எனில் பிறர் மதிக்கத் தக்க வகையில் எம் பண்பு இருக்க வேண்டும் எந்த ஒரு மனிதனும் ஒருவருடன் பழக நினைக்கும் போதே அவரது பண்பு குறித்த கேள்விக்குறிகள் அவசியம் எழும். எழ வேண்டும். அவ்வாறு இல்லையேல் காலப்போக்கில் இவர்கள்தான் எம்முடன் இத்தனை காலமும் நட்புப் பாராட்டி வந்தவர்கள் இவர்களது செயல் நாம் எதிர் பார்க்கும் இடத்தில் இல்லை என்று தெரிய வந்தால் அதை விடவும் துன்பம் வேறு இல்லை எனலாம். நல்லவர்களாக வாழ்பவர்கள் கிடைத்தல் என்பது நாம் செய்த புண்ணியம். அதே போன்று தீய ஒழுக்கம் உடையவர்களின் நட்பு கிடைத்துவிட்டால் காலனும் நம் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் நாமே காலனை அழைக்க நேரிடும் அதனிலும் இன்றைய கால கட்டங்களில் மனிதன் எதைச் சிந்திக்கின்றான் அவன் மனம் எம்மிடம் இருந்து எதை எதிர் பார்க்கின்றது ,அடுத்த கட்டமாக அவன் எமக்கு என்ன செய்வான் என்பனவற்றைக் கூட எம்மால் அறிய முடிவதில்லை. அவ்வளவு தூரம் நம்பிக்கைத் துரோகத்தில் மனித இனம் மிக மிக முன்னேறி விட்டதென்றே கருத முடிகிறது .இதனால்தான் எங்கு பார்த்தாலும் சினிமாவிலோ அல்லது தொலைக் காட்சி நாடகங்களிலோ அல்லது பிற செய்தித் தளங்களிலோ வரும் செய்திகள் தகவல்கள் எல்லாமே பார்த்து எம்மால் <span style="font-family: "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px; text-align: left;">யீரணிக்க முடிவதில்லை .ஏன் இவைகள்தான் இன்று எம் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன !....</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzG1fw8bpUudwdcuivFb-XfHG7inEfKme1f7XNXjA4xqpUu8JKbOhbqKfpc-lN8JrTHwPPEdo_YTEWtGuNKH8vy1V3aiwgDs8kNYKX7NcFtNjIh01NymIEhWNHHSnJV2JbtJwUhKHcnSQb/s1600/life-quotes-40.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="384" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzG1fw8bpUudwdcuivFb-XfHG7inEfKme1f7XNXjA4xqpUu8JKbOhbqKfpc-lN8JrTHwPPEdo_YTEWtGuNKH8vy1V3aiwgDs8kNYKX7NcFtNjIh01NymIEhWNHHSnJV2JbtJwUhKHcnSQb/s640/life-quotes-40.gif" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px; text-align: left;"> </span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px; text-align: left;">மகிழ்ச்சிப் பூக்கள் பூக்க வேண்டும் என்றே மனிதன் பிற உறவுகளைத் தேடி அடைகின்றான் அங்கே கண்ணீர்ப் பூக்களைக் கலக்க விடாமல் இருக்க எமக்கு மிகுந்த கவனம் தேவை என்பதில் நாமேதான் உறுதியாக இருக்க வேண்டும் பிறர் பேச்சைக் கேட்டு அவர்களை நல்லவர்கள் என்ற முடிவுக்கு நாம் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது .எமது ஒவ்வொரு செயலுக்கும் முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விளக்கம் கேட்பதோ அல்லது விளங்கப்படுத்துவதோ கூடவே கூடாது .சில சமயம் உங்கள் நண்பர்கள் மீது உங்களுக்கு சந்தேகம் எழலாம் அவ்வாறன சமயங்களில் பொறுமை காப்பதோ அல்லது மறை முகமாக மன்னித்து விடுவதையோ தவிர்த்துக்கொள்ளுங்கள் .காரணம் நட்புக்கிடையில் ஒளிவு மறவு தேவை இல்லை .மிகப் பெரிய குற்றங்கள் செய்தவர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் செயலை அவதானித்து மெதுவாக நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் மற்றபடி சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் தெளிவு படுத்தி வாழப் பழகுங்கள் .அதை விட்டு விட்டு இவ்வளவு காலமும் நண்பர்களாக வாழ்ந்ததை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருந்து விடாதீர்கள் . இந்த விட்டுக்கொடுப்புகளை தவறாக ஒருவர் புரிந்துகொண்டால் இதை விடவும் பெரும் தவறுகளை செய்து விட்டு அவர்களும் ஒரு நேரத்தில் உங்களுக்கு துரோகிகளாக மாறலாம் .எதற்கும் முன்னெச்சரிக்கையாக உங்கள் நண்பர்களின் விபரங்களை உங்கள் வீடில் உள்ள பெரியவர்களுடன் ஓர் அறிமுகம் செய்து வைத்துக்கொள்ளுங்கள் .இதனால் உங்கள் நட்பு ஆரோக்கியமானதா, அவர்கள் நல்லவர்கள்தானா, யாருடன் நாம் எப்படிப் பழக வேண்டும் என்ற பெரியவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் கிட்டும். அவை உங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . ஒளிவு மறைவு அற்ற நட்பே உகந்தது இக் காலத்திற்கு என அனைவரும் உணர வேண்டும். நண்பர்களின் தொகைகளை விடவும் நட்புப் புனிதமானது அதை மதிக்கும் ஒருவரே எமக்கு நண்பராக வர வேண்டும் என்ற குறிக்கோள் இங்கு அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இன்றைய என் ஆக்கத்தினை நிறைவு செய்கின்றேன் .மிக்க நன்றி உறவுகளே வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் . </span></div>
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px; text-align: left;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjabDvKLJu3gDpS8DlpzHRj6cbcYCpvd-73h4_Y8YWUaw6R2qgCD3w0M0CWRFXiV2MRYKH8BLILsTMPh1Ukedx7KncDq8nMgm0i6kgUskiMnCSycCvrgaGPYQHvabcn6jzS5-mWa_ZERFA9/s1600/imgres.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjabDvKLJu3gDpS8DlpzHRj6cbcYCpvd-73h4_Y8YWUaw6R2qgCD3w0M0CWRFXiV2MRYKH8BLILsTMPh1Ukedx7KncDq8nMgm0i6kgUskiMnCSycCvrgaGPYQHvabcn6jzS5-mWa_ZERFA9/s1600/imgres.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZXhwb5WycFe6G5ZGxwkDT3I3TiDN1l0iGSjhRkU-A7WSCK3GoZbpfnlZsKMV8OK2K-bucJGVRcM9qHh8WQjMop7rqj9NbzKdQ8ZF_0FYdTW3uJZ2SX8PtbIRVBlfGdAcOXUCAoHMipKt0/s1600/Thirukkural-786t.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="58" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZXhwb5WycFe6G5ZGxwkDT3I3TiDN1l0iGSjhRkU-A7WSCK3GoZbpfnlZsKMV8OK2K-bucJGVRcM9qHh8WQjMop7rqj9NbzKdQ8ZF_0FYdTW3uJZ2SX8PtbIRVBlfGdAcOXUCAoHMipKt0/s320/Thirukkural-786t.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: "arial" , "helvetica" , sans-serif; line-height: 28px; text-align: left;"> </span></div>
</div>
</div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-87749768855507098212012-09-27T01:10:00.000-07:002017-04-23T14:40:01.605-07:00happy birthday google!!!!!!!...........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_E-lX6G0bed4uqAHlW6FZyfaCrCwHpA55F9R4mRAghtvkoxVaBvH15W0KxOeNMgyDangcwGKnwRCsKP-iPXlrmu4ZcXLG5Y7MHc-PR8mv-NVzV7fmFlOCL_eJ-mmQVK-IuclcP4gHgfJV/s1600/mqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_E-lX6G0bed4uqAHlW6FZyfaCrCwHpA55F9R4mRAghtvkoxVaBvH15W0KxOeNMgyDangcwGKnwRCsKP-iPXlrmu4ZcXLG5Y7MHc-PR8mv-NVzV7fmFlOCL_eJ-mmQVK-IuclcP4gHgfJV/s640/mqdefault.jpg" width="640" /></a></div>
கணனித் திரையில் உன் நாமம்<br />
<div>
அதைக் காணும்போதே மனம் மகிழும் </div>
<div>
இந்தத் தரணி எல்லாம் உன் சேவை </div>
<div>
அதைத் தந்தே எம்மை நீ வளர்த்தாயே !...<br />
<a name='more'></a></div>
<div>
<br /></div>
<div>
மலரும் நினைவுகள் எல்லாமே </div>
<div>
உன் மன்றம் வந்து நினைவாகும் </div>
<div>
புகழின் உச்சியில் நாம் ஏற </div>
<div>
ஒவ்வொரு பொழுதும் உழைக்கும் நீ வாழ்க !.....</div>
<div>
<br /></div>
<div>
கூகுள் என்ற பெயர் சொன்னால் </div>
<div>
குழந்தை கூட தவண்டு வரும் !!!!.</div>
<div>
உன் சேவை கண்டு வியந்தோம் நாம் </div>
<div>
எந்நாளும் நீ இங்கு வளம் பெற வேண்டும் ........</div>
<div>
<br /></div>
<div>
ஆலம் விழுது போல் நாமும் உன்னை </div>
<div>
அண்டிப் பிளைத்தே வாழ்கின்றோம் </div>
<div>
நீயும் தாயின் தொப்பிள் கொடிபோலே </div>
<div>
எம் தமிழை என்றும் வழர்க்கின்றாய் !!!!..... </div>
<div>
<br /></div>
<div>
காலம் உள்ள காலம் வரை எம் </div>
<div>
கண்ணாய் இருக்க நீ வேண்டும் </div>
<div>
நீலக் கடலில் விளைந்த முத்தே </div>
<div>
நீ இங்கு வாழ்க்க வாழ்க பல்லாண்டு !.....</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYE_91y7Uvwypar2fSEmUStceEMpZbuc8lTeUHX3Q-2XlDFUnYCea6JrXe3WOCCkXHum-yGskAxvfU9SSzlKKrzEcZXQ23JKbHrqzsJPGtJC4H1rxotRaT2aoeTKViOk-5pSn4c5XKdHWX/s1600/birthday-gift.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="382" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYE_91y7Uvwypar2fSEmUStceEMpZbuc8lTeUHX3Q-2XlDFUnYCea6JrXe3WOCCkXHum-yGskAxvfU9SSzlKKrzEcZXQ23JKbHrqzsJPGtJC4H1rxotRaT2aoeTKViOk-5pSn4c5XKdHWX/s640/birthday-gift.gif" width="640" /></a></div>
<div>
அன்பு உள்ளத்தின் அகத்தில் இருந்து </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-37989505344236101772012-09-25T11:57:00.000-07:002017-04-23T12:20:52.669-07:00வாழ்க்கை என்பது வாழ்வதற்கே .<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6xOjbiifDXMrukmqbew1oA8i-GT6IJ0i5kyxKxmMUOTJJ73gh6QQjAl5br5UUuPXpSU4yQBEzHSacElOYwVZuyz62dJP40bzfilmq_wEej54BI0YiQhWGKg-B-1DJznfMdpIEQy6UkAfL/s1600/766107532_720222.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="395" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6xOjbiifDXMrukmqbew1oA8i-GT6IJ0i5kyxKxmMUOTJJ73gh6QQjAl5br5UUuPXpSU4yQBEzHSacElOYwVZuyz62dJP40bzfilmq_wEej54BI0YiQhWGKg-B-1DJznfMdpIEQy6UkAfL/s400/766107532_720222.gif" width="400" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
இன்றைய உலகம் எங்கு போய் முடியும் !!..</div>
<div style="text-align: justify;">
இந்த வேதனை இன்று எம்மில் பலருக்கும் இருக்கின்றது .காரணம் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் வேறு இன்று இருப்பவைகள் முற்றிலும் வேறுபட்டவைகளே. இந்த வேறுபட்ட கலாச்சாரத்துடன் நாம் அவசியம் ஒத்துழைத்துத்தான் வாழ வேண்டுமா என்ற கேள்வி எழும்போது பலருக்கும் இதில் உடன்பாடு என்பது கிடையாது இருந்தும் என்ன செய்வது சிலதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப் படுகின்றோம் என்பதே<br />
<a name='more'></a> ஒரு பெரும் வேதனைக்குரிய விசயம் இந்த இடத்தில்தான் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் பிறப்பது இறப்பது இவைகள் வேண்டுமானால் இறைவனது சித்தம் எங்கள் தலை எழுத்து என்று நாம் வரும் எல்லாவற்றையும் சமாளித்து வாழலாம் ஆனால் எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமைகளை மட்டும் அதிக பட்சம் அடுத்தவர்கள் எண்ணம்போல் விட்டு விடக் கூடாது. காரணம் இன்றைய உலகம் அத்தனை நம்பிக்கை வாய்ந்ததாக இருப்பதில்லை நல்லவைகளை நாம் அவசியம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக பொறுப்பற்று எந்தக் கவலையும் அற்று எல்லாம் எமது நன்மைக்காகவே என்று இருந்துவிடக் கூடாது என்பதே என் கருத்து. அவ்வாறு இருக்கும்போது ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் இன்றைய காலத்தில் உள்ள அண்ணன், தம்பி ,அக்கா மாமா ,மாமி ஏன் அம்மா அப்பா கூட பல இடங்களில் தங்கள் சுயநலத்துக்காக பலதையும் செய்வதை நாம் கேள்வியுற்ற வண்ணம்தான் இருக்கின்றோம். அதற்காக எல்லா இடத்திலும் எல்லோரும் தப்பானவர்கள் என்று பொருள் கிடையாது. அதே சமயம் எங்கள் துரதிஸ்ரம் ஏதோ ஒரு காரணத்துக்காக இவர்கள் கூட யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டோ அல்லது நம்பக் கூடாதவர்களை நம்பியோ எமக்கு நல்லதயே செய்வதாக எண்ணிக்கொண்டு இந்த இடத்தில் தவறு இளைத்துவிடலாம். இல்லையா ?.....இந்த விசயத்தில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் பெண் பிள்ளைகள்தான். இதற்க்கு முக்கிய காரணம் எமது கலாச்சாரமும் பெண்களுக்கென உரிய பாதுகாப்பு இன்மையும்தான்.ஒரு பெண் தன் மழலைப் பருவத்தைத் தாண்டும்போதே பெற்றவர்களுக்கு மனதில் பயமும் சுமையும் அதிகரித்து விடுகின்றது .இதனால் அவளின் பாதுகாப்பு கருதி அவளை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் அல்லது விட்டு வைக்க வேண்டும் என எண்ணுவார்கள் .இதே சமயம் ஒரு சிலர் தங்கள் குடும்ப வறுமை நிலையைப் போக்கவும் தன் பிள்ளையை ஒரு பெரிய பணக்காரனுக்குக் கட்டிக் கொடுக்க முன்வருவார்கள் .இந்த இடத்தில்தான் எமது விருப்பு வெறுப்புகள் புறக்கணிக்கப் படுகின்றது அல்லது கவனத்தில் எடுத்துக்கொள்ள நினைப்பதில்லை என்று சொல்லலாம். இந்தமாதிரி விடயங்கள் ஒரு பெண்ணின் திருமண வாழ்வில் மட்டும் அல்ல .அவளது படிப்பு ,அவளது தேவைகள் ,அவளது சந்தோசம் என பல்வேறுபட்ட எண்ணங்களிற்கு தடையாக அமைதுவிடுகின்றது .</div>
<div style="text-align: justify;">
<br />
<div class="separator" style="clear: both; text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipIlxA7uDii_Kt9X4mqj1409DKkH_kW57LB69eJKAH-MHMtTPA8hLUGyN4FjxCzF62PMwVGKumFdcZPqofLdYeZQi1rPHjtq2G3orDv9MKgGjup6Ws0XUGsIwXyA61aMX3RcuQ6wHQ-K9K/s1600/50_1dubai_wedding_photographer__076.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="426" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipIlxA7uDii_Kt9X4mqj1409DKkH_kW57LB69eJKAH-MHMtTPA8hLUGyN4FjxCzF62PMwVGKumFdcZPqofLdYeZQi1rPHjtq2G3orDv9MKgGjup6Ws0XUGsIwXyA61aMX3RcuQ6wHQ-K9K/s640/50_1dubai_wedding_photographer__076.jpg" width="640" /></a></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாழ்க்கையில் வேறு எந்த ஒரு விசயத்தில் இழப்பு வந்தாலும் அதை சமாளித்து விடலாம் .ஆனால் ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை என்பது அவ்வாறு யோசிக்க முடியாத ஒரு விடயம் .இந்த விசயத்தில் இப்போது அதிகமாக வெளிநாடுகளில் உள்ள பெற்றோரும் மிகுந்த அவசரப்போக்கைக் கையாளுவதாக உணர முடிகின்றது . இதனால் எந்த ஒரு அனுபவமோ பக்குவமோ இந்தப் பிள்ளைகளுக்கு இருக்கும் என்றால் அது மிக மிகக் குறைவெனவே சொல்லிக் கொள்ளலாம் .காரணம் இங்கு வாழும் பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றவர்களின் கைக்குள் வளரும் சந்தர்ப்பங்கள் அதிகம் கிடையாது. அனேகமாக இங்கு உள்ளவர்கள் வேலைக்கு போகும் பெற்றோர்களே. பாடசாலையில் வேண்டுமானால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி பல விசயங்கள் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் .இந்த இடத்திலும் பிள்ளைகள் தவறிப் போவது வழக்கமாக உள்ள ஒரு நிலைப்பாடுதான் இதனால் இன்று எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக திருமணங்கள் நிகழ்த்தப் படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக விவாகரத்தும் பெறப்படுகிறது இதனால்தான் பெண் பிள்ளைகள் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புடனும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் .இதையே பெற்றவர்களும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் .பெண் பிள்ளைகளை சிறுபிள்ளைத் தனமாக நடக்க விட்டு விட்டு பின் வேதனைப் படுவதிலும் அர்த்தம் இல்லை .நாம் எந்த ஒரு முடிவை எடுப்பதானாலும் அவளின் விருப்பு வெறுப்புகளைக் கருதில்க் கொண்டே எடுக்க வேண்டும் .இதுவே அந்தப் பிள்ளையின் எதிர்காலத்துக்கு மிகச் சரியான தேர்வாக அமையும். அத்துடன் பொதுவாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையில் எப்போதும் ஓர் புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு இருக்கும்போதே பிள்ளைகளுக்கும் தங்கள் நிலைப்பாட்டை எந்த ஒரு அச்சமோ அல்லது கூச்சமோ இன்றி தெளிவு படுத்த ஏதுவாக இருக்கும் .பிள்ளைகளை அதிக கண்டிப்புடன் நடத்துவதும் தவறாகும் .இந்தக் கண்டிப்புகள் கூட எமக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒரு விரிசலைக் காலப் போக்கில் உருவாக்கி விடும் .எதற்கும் மனம் திறந்து பேசும் ஆற்றல் எம் எல்லோருக்கும் இருத்தல் வேண்டும். இந்தக் குணாதிசயங்களால் நிட்சயமாக எல்லோருமே சந்தோசமாக வாழ முடியும் அத்துடன் எமது பொழுதுபோக்கு நேரங்களை அதிகமாக பிள்ளைகளுடன் நாம் செலவிடுவோமானால் பிள்ளைகளின் தேவைகளை அவர்களின் உணர்வுகளை அவர்கள் சொல்லாமலே நாமாகப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக்க இது அமையும் .உங்கள் பிள்ளைகளை காக்க வேண்டிய காலம் அறிந்து காத்துக்கொண்டீர்களானால் பின் வெற்றி என்றும் உங்களுக்கே .வாழ்த்துக்கள் உறவுகளே எல்லோர் வாழ்விலும் சந்தோசம் பொங்கிட .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDIGL1bKMl-2TT5jPZQN-7aLkf0gM5EF8mCxwHAGN8qcnp4e0UrKFziqpz4cihvWjjd9uyFHzLIhGmLl-qtsGylHpZ2zX_6DaBay1qX8nelR1B2pg7-3uJoRd3TY2ZicX4wfykDzUTCJNt/s1600/imgres.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDIGL1bKMl-2TT5jPZQN-7aLkf0gM5EF8mCxwHAGN8qcnp4e0UrKFziqpz4cihvWjjd9uyFHzLIhGmLl-qtsGylHpZ2zX_6DaBay1qX8nelR1B2pg7-3uJoRd3TY2ZicX4wfykDzUTCJNt/s1600/imgres.jpg" /></a></div>
<br />
மிக்க நன்றி உங்கள் வரவுக்கும்<br />
கருத்துக்களுக்கும் !!..... </div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-46858867543157010342012-09-15T17:50:00.000-07:002017-04-23T12:21:18.367-07:00காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சே!!!..... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH2xzBav3OAkNunpQxA1Cmzvl7YgUpn8aDB0DaD8PuVp3y_kg1bpZjXfrB2VKl5im8j4Aus0AT8QIt35kWstEJGuufNwmu6j7a3uSyGfMsnYE2Npf-trmC1BkqUh32DJewSnbrzCrClP7F/s1600/1nn941_entwall_preview.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH2xzBav3OAkNunpQxA1Cmzvl7YgUpn8aDB0DaD8PuVp3y_kg1bpZjXfrB2VKl5im8j4Aus0AT8QIt35kWstEJGuufNwmu6j7a3uSyGfMsnYE2Npf-trmC1BkqUh32DJewSnbrzCrClP7F/s640/1nn941_entwall_preview.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
கண்ணன் ஒரு சுட்டிப் பயல் .சின்ன வயதில் இருந்தே இப்படித்தான் எதிலும் ஒரு வேகம் .தான் நினைத்ததை சட்டென செய்து முடித்து விடுவான் .அது சில சமயங்களில் வியப்பாகவும் சில சமயங்களில் விபரீதமாகவும் இருக்கும் ஆனாலும் சின்னப் பிள்ளை அதிலும் அதிக செல்லமாய் வளர்ந்த பிள்ளை எனவே அவனுடைய பெற்றோர்கள் அவனை கண்டிப்பது மிக மிகக் குறைவு அதனால் பாடசாலையிலும் அவன் குடியிருக்கும் தெருவிலும்<br />
<a name='more'></a> எப்போதுமே ஒரு வழக்கு வந்தபடிதான் இருக்கும் .பதிலுக்கு அவனுடைய பெற்றோரும் அவனை காப்பாற்றுவதாக நினைத்து பிறர் மீது குற்றம் சொல்லியே தன் பிள்ளைக்கு வக்காளத்து வாங்கி அதிலும் அவர்களே வென்றும் விடுவார்கள் இவைகள் அனைத்தும் சின்ன வயதாக இருந்தபோது சரி போனால் போகட்டும் என்றே பிறரும் கண்டும் காணாமலும் விட்டு விட்டார்கள் .ஆனால் காலப்போக்கில் அவன் வளர வளர அதே பழக்கமும் அவனுடன் சேர்ந்தே வளர ஆரம்பித்து விட்டது .ஒரு எல்லைக்கு மேல் அவனுடைய பெற்றோர்களால்க் கூட அவனை அடக்க முடியாமல் போய்விட்டது .காரணம் என்ன ?....அவன் செய்த தவறுகளை கண்மூடித்தனமாக பெற்றோர்களே கண்டிக்காமல் அறிவுரை சொல்லாமல் அவனுக்கு பக்க சார்பாய் நடந்ததுதான் இதற்க்கு முக்கிய காரணம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் விளைவு இன்று என்னதான் ஆச்சு ????? .....தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றாகி விட்டது .கண்ணன் பெயரில் மட்டும் அல்ல அவன் செயல்களிலும் அந்த மாயக் கண்ணனை மிஞ்சிவிட்டான் .எவ்வளவுதான் அறிவுரைகள் சொன்னாலும் அவை விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிட்டது .தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையான கண்ணனுக்கு அவனது கூட்டாளிகளின் அறிவுரையே என்றும் பெரிதென கருதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போவதனால் பிறரிடத்தில் நன் மதிப்பு இழந்திருக்கும் அவனை அவன் பெற்றோர்களே வெறுத்து ஒதுக்கும் நிலை இன்று வலுவடைந்து விட்டது .இதனால் மேலும் மேலும் தன் அறிவைக் கூட அவன் தவறான பாதைகளில் செலவிடுவதில் பெரும் கில்லாடியாக வளர்ந்து வருவதை சொல்லி வேலை இல்லை!!!......இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு அவனைப் பெற்றவர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டே சாகலாம் என்று மக்கள் சாபம் இடும் அளவிற்கு அவன் முன்னேறி விட்டான் என்றால் பாருங்கள்!!!.. அதிலும் என்ன அதி விசேசம் என்றால் தனக்கே எல்லாம் தெரிந்ததுபோல் ஒழுக்கத்தைப்பற்றி அறிவுரை சொல்வான் பாருங்கள் ஸ்ஸ்ஸ்.... அம்மாடியோய் போதும்டா ராசா ஆள விடு சாமி என்று மனுசன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் அளவிற்கு படு கண்றாவியாய் இருக்கும் .எதிர்த்து நின்றால் போதும் எதிரே நிற்பவர்களுக்கு சங்குதான் .அவன் பேச்சில் எப்போதுமே மீன் தரையில் வாழுகின்ற யீவனாக்கும் :))))) இதற்க்கெல்லாம் காரணம் என்ன சரியான பிள்ளை வளர்ப்பு இல்லை என்பதுதானே ???.........</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCf77gpWpC0zPczrsFLrYUFL9SN6oFEVsrzdLWcWe9kgdWzarjFsqT8rT2YF3tbFZYio3oxHFzbkHNVMg6fOZ5Z1t3GA3R5XmSCw5dcZYKLTny0oyRSyjESU2V-NVDTvnmHVOWEY_lA6fD/s1600/Bhagyaraj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="427" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCf77gpWpC0zPczrsFLrYUFL9SN6oFEVsrzdLWcWe9kgdWzarjFsqT8rT2YF3tbFZYio3oxHFzbkHNVMg6fOZ5Z1t3GA3R5XmSCw5dcZYKLTny0oyRSyjESU2V-NVDTvnmHVOWEY_lA6fD/s640/Bhagyaraj.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவது அது அந்தப் பிள்ளைகள் செய்த பெரும் புண்ணியம். ஆனாலும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் எப்போதுமே பெற்றோர்கள் ஒரு நீதிபதியைப்போல் இருத்தல் என்பது மிக மிக அவசியமாகும். இது அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நல்லபடியாக அமைவதற்கு வழி வகுக்கும் .இல்லையேல் நாம் எப்படி நடக்கின்றோமோ அதே போன்று எதிர்காலத்தில் எம் பிள்ளைகளும் இருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம் .குழந்தைகளின் உள்ளம் என்பது ஒரு தூய்மையான வெற்றுத் தாள் போன்றது .இதில் நாம் எதை வரைகின்றோமோ அதை அடிப்படையாகக் கொண்டேதான் அதன் குண இயல்புகளும் அமையும் இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்லப் போனால் கருவுற்று இருக்கும்போது ஒரு தாயின் மன உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றதோ அந்த உணர்வுகள்கூட பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு மருத்துவக் கணிப்பீடு .ஆதலால்தான் கர்ப்பிணித் தாயை அந்தப் பிரசவ காலத்தில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எம் முன்னோர்கள் சில நல்ல சடங்குகளைச் செய்வதில் கூட ஆர்வம் உள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர் !....</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaZKQD7r4byNsVZZuxaW1czGw-0G83Zo39ubDlGWhBX_8zVk0TGV3pi1VUpyeLnqXJHuVAOpyG0C9z01yb_zBfDbv1OMy3oypbf4tA4CGahLmVnIVSC57jadMRlhvnmCEs02HZ9gkNKHDo/s1600/6a0105369f72c0970c0111688baf00970c-500wi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="443" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaZKQD7r4byNsVZZuxaW1czGw-0G83Zo39ubDlGWhBX_8zVk0TGV3pi1VUpyeLnqXJHuVAOpyG0C9z01yb_zBfDbv1OMy3oypbf4tA4CGahLmVnIVSC57jadMRlhvnmCEs02HZ9gkNKHDo/s640/6a0105369f72c0970c0111688baf00970c-500wi.jpg" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
இவைமட்டும் அல்லாமல் கர்ப்ப காலத்தில் மனதிற்கு இனிமையான பக்திப் பாடல்களைப் (கந்த சஷ்டி கவசம் போன்ற ) பாடுவதோ அல்லது கேட்பதுவோ கூட தாய்க்கும் பிறக்கப் போகும் சேய்க்கும் அருமையான நல்ல பலா பலனை அள்ளி வழங்கும் என்பதுவும் நூற்றுக்கு நூறு விகிதம் உண்மை. எனவே அன்பார்ந்த பெற்றோர்களே எம் குழந்தைகள் நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்வது எம் வளப்பு முறையில் தங்கி உள்ளதால் எமது பாசத்தையும் நேசத்தையும் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு வளரும் எம் குழந்தைகளின் எதிர்கால நன்மை கருதி அவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு மனம் தளராமல் துணிந்து நின்று அவர்களை நேர்வழியில் கொண்டு செல்ல நல்ல அறிவுரைகளையே என்றும் வழங்கி வாருங்கள் அவ்வாறு நல்ல அறிவுரைகளுடன் வளரும் பிள்ளைகளே நாளை உங்கள் பெயரையும் புகழையும் காக்கும் என்பதை ஒரு போதும் உணரத் தவறாதீர்கள் . </div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-71501372406284744802012-09-12T16:45:00.000-07:002012-09-12T22:12:41.534-07:00பழிவாங்கும் உணர்வுகள் நல் வழிகாட்டுமா!.... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuzttR5BIa5-USSTVIeiIM2gurqFIgDijzmTbaGpvqoBJv26Zoe6b-SsjQjgVm9gcPS9HrZOzdshyphenhyphenRRJbRlsAJcfWqRxzoDH2WzEtht0ktHk90qrXX2OM6syjH4ng_7mCsW5bPdlL_5Y7Q/s1600/imagesCA0MRVAC.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuzttR5BIa5-USSTVIeiIM2gurqFIgDijzmTbaGpvqoBJv26Zoe6b-SsjQjgVm9gcPS9HrZOzdshyphenhyphenRRJbRlsAJcfWqRxzoDH2WzEtht0ktHk90qrXX2OM6syjH4ng_7mCsW5bPdlL_5Y7Q/s400/imagesCA0MRVAC.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
அந்தி சாயும் அழகு என்ன அழகோ !....உடல் அலுப்படைந்து இருந்தாலும் எங்கள் நாட்டில் நாம் பெற்ற இன்பம் அவை இனி என்றுதான் கிட்டும் .இந்த வேதனை எந்தத் தமிழன் நெஞ்சில் இல்லை என்று சொல்லுங்கள் ?...எம் கடந்த கால வாழ்க்கையில் இருந்த சந்தோசம் ,நின்மதி இனி இந்த ஜென்மத்தில் எவ்வளவுதான் இருந்தாலும் பெற்றுவிட முடியுமா?..ஆரோக்கியம் அற்ற உணவுக்கும் வீண் அலைச்சலுக்கும் பழக்கப்பட்ட உடலும் மனமும் வெறும் பிண்டமே ஒளிய இதற்க்கு எங்கே ஆயுட் பலம் உள்ளது !...யாரைக் கேட்டாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிலும் குறிப்பாக வேலைக்குப் போபவர்கள் ஏதோ இருக்கின்றோம் என்ற சொல்லைத் தவிர அவர்களிடம் அதிகம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் மனிதன் அதிகம் நேசிப்பது உறவுகளையும் அவனுடைய கடந்த கால நினைவுகளையும்தான் .அந்த நினைவுகளும் உறவுகளும் இன்று இருந்த இடமே தெரியாமல் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வெற்றிடங்களாக காட்சி தரும்போது மனித மனங்கள் மரத்துப் போவதும் எதிலும் பற்றற்று வாழ்வதும் இயல்பாக ஏற்படக்கூடிய தாக்கங்கள்தானே .இந்தத் தாக்கங்களால் இன்று எம் சமூகம் எதிர்நோக்கும் அவலங்கள் அவை சொல்லில் அடங்காது. மனங்களில் சுமைகளை மறைத்து வைத்து விட்டு எல்லோரையும்போல போலியாக சிரித்துக்கொண்டும் எந்தக் கஸ்ரமும் இல்லாத சாதரணமான மனிதனைப்போல் தன்னையும் அடையாளப் படுத்தும் இந்த உறவுகள் பலதரப்பட்ட பணிச் சுமைகளில் சிக்குண்டு வதைக்கப்ப்படும்போது பல முறை மரணித்து உயிர் பெறுவதை எம் அகக்கண்கொண்டு முழுமையாக உணர முடிகிறது .இவர்களைப் பார்க்கும்போது எம் முன்னோர்கள் செய்த பாவம்தான் என்ன என்ற கேள்வியும் ஆறாத வேதனையும் ஈட்டிபோல் நெஞ்சைத் துளைபோடுகின்றது ஏன் இப்படி !!!!......<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdQt1GZ4PQamNzMmoez5Psp5qhL28v22bJS-vJsPopFzOj4U65GfsMiZN6ECv4m0SyY-Q-tQya24DnJ0GwxWsXHzaP0GVIHPr_Of-AxQh7NXnaydza0gJXBp6UDat_qlZIgCDP774JiyFv/s1600/167744_10150402064820055_197765520054_17067314_3501958_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="276" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdQt1GZ4PQamNzMmoez5Psp5qhL28v22bJS-vJsPopFzOj4U65GfsMiZN6ECv4m0SyY-Q-tQya24DnJ0GwxWsXHzaP0GVIHPr_Of-AxQh7NXnaydza0gJXBp6UDat_qlZIgCDP774JiyFv/s400/167744_10150402064820055_197765520054_17067314_3501958_n.jpg" width="400" /></a></div>
எல்லா விதத்திலும் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் உறவுகளின் உணர்வுகளை சில சமயங்களில் பிறர் புரிந்துகொள்ளாமல் நடக்கும்போது அந்த சமயத்தில் இவர்களின் பேச்சு செயல் யாவுமே முற்றிலும் மாறு பட்டதாக இருக்கும் .இதற்க்கு காரணம் அவர்களின் மன அழுத்தம் அல்லால் வேறென்னவாக இருக்க முடியும் .இவர்களை நாம் குற்றவாளிகள் என்று கணக்கிட முடியுமா !..அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் அப்படி .இந்த மாதிரி கனத்த இதயங்களுடன் வாழும் எம் உறவுகளை நாம் ஆதரிக்க வேண்டும் அல்லால் அவர்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது அவர்களின் குண இயல்புகளை குறைவாக மதிப்பிட்டு புறம் பேசித் திரிவதோ மனிதநேயம் அற்ற செயலாகும் . .பிறர் துன்பப் படும்போது அவர்களின் துன்பத்தை ஆற்ற முற்பட வேண்டும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் .இந்த தார்மீக குணம் எமக்குள் இல்லை என்றால் முதலில் எம்மைப் பார்த்தே நாம் வெக்கப்பட வேண்டியவர்கள் என்பதை புரிந்துகொள்வதும் மிக மிக அவசியமான ஒன்றாகும். ஒருவர் நல்லவராக இருப்பதும் கெட்டவராக இருப்பதும் அவரவருடைய வாழ்க்கைச் சூழலில்தான் தங்கி உள்ளது ஆனாலும் எமக்கு ஒருவருடைய செயல் பிடிக்கவில்லை ,பேச்சு பிடிக்கவில்லை என்றொரு சூழ்நிலை ஏற்படும்போது சரிக்கு சமன் வாதிடுவதும் வீண் விரோதங்களை வளர்த்துக்கொண்டு ஆளையாள் குற்றஞ் சுமத்திக் கொள்வதும் நீண்ட நாள் பகை என்ற எண்ணம் உருவாவதற்கு இடமளிக்கின்றது. இது ஒரு முற்றிலும் தவறான பழக்கம். இந்த மாதிரி குணாதிசயங்கள் உள்ளவர்கள் இதைத் தவிர்த்து வாழ்வதே மிகவும் ஆரோக்கியமான விடயம். இல்லையேல் அதிக புரிந்துணர்வு அற்ற நிலையால் ஒருவரை ஒருவர் தாக்குவதும் அழிக்க வேண்டும் என்ற கொரூர எண்ணங்கள் உருவாவதற்கு வழி வகுத்துவிடும். இந்த தீய குணாதிசயங்களால் இன்று பல இடங்களிலும் நிகழும் உண்மைச் சம்பவங்களை நாம் அன்றாடம் கேள்வியுற்ற வண்ணம்தான் இருக்கின்றோம் இருந்தும் இதைப்பற்றி அதிகம் நாம் அக்கறை கொள்வதில்லை எமக்கு ஒன்று நிகழ்ந்த பின்னர் நாம் அப்படிச் செய்திருக்கலாம் இப்படிச் செய்திருக்கலாம் என்று சிந்திப்பதை விட முற்கூட்டியே பகைமையை தவிர்த்து ஒற்றுமையாக வாழ முயற்சிக்கலாம் அதற்க்கும் மனம் இடமளிக்கவில்லை என்றால் பழிவாங்கும் உணர்வுகளைக் கைவிட்டு விட்டு ஒதுங்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-IHediTYt5fWT-uB96QLaM0ojzDH7iDpmz3fMs7x7SKKXuifmwBW0emA-Dqe_Cckrp3rBKqON3xCskoNE-eN9q62vcEeLupCJ8DbU02tHbJoBK44qd5uqvBaT7iFhLj3Q8QcyEjJPmpxk/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-IHediTYt5fWT-uB96QLaM0ojzDH7iDpmz3fMs7x7SKKXuifmwBW0emA-Dqe_Cckrp3rBKqON3xCskoNE-eN9q62vcEeLupCJ8DbU02tHbJoBK44qd5uqvBaT7iFhLj3Q8QcyEjJPmpxk/s400/1.jpg" width="400" /></a></div>
<br />
தீய குணாதிசயங்களை நாம் கைவிடும்போது அதிஸ்டம் எம்மைத் தேடி வரும். அதே சமையம் தீய குணாதிசயங்களை நாம் தேடிச் செல்லும்போது துரதிஸ்டம் எம்மோடு கூடி வரும். பிறருக்காக இல்லாது போனாலும் நாம் எம்மை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்த்தல் எல்லாவகையிலும் நன்மை பெயர்க்கும் என்பதில் துளியேனும் சந்தேகம் இல்லை.இதையெல்லாம் விட்டு விட்டு காட்டுமிராண்டித் தனமாக ஊர் வம்பு வளர்த்தலும் பிறரின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு குழப்பம் விளைவித்தலும் ,எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல தலைக்கனம்கொண்டு பிறர் மனதை நோகடிக்கும் செயல்களில் அதிக ஆர்வம் காட்டுவதும் ,அடுத்தவர்களுடைய வாழ்வை ஒரு பொழுதுபோக்காக கருத்தில்கொண்டு நையாண்டி செய்வதும் தூங்கிக்கொண்டு இருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பி வேடிக்கை காட்டுவதுபோல் அமையும் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyo-EhKyRpUEezSX3TOfr2G2TZtOQnwbEXQ29ZC-hFuJoP9unUWw16AHJAWILbgKkvMeWcpIK_djA_nmNiDfZLb6jOq_jk1cSWUiRnhvaDlBsPXaExYzCPkRg9I72U6Q7Z1vIUCINL5T-s/s1600/World_News_9-1_jpg_614005t.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyo-EhKyRpUEezSX3TOfr2G2TZtOQnwbEXQ29ZC-hFuJoP9unUWw16AHJAWILbgKkvMeWcpIK_djA_nmNiDfZLb6jOq_jk1cSWUiRnhvaDlBsPXaExYzCPkRg9I72U6Q7Z1vIUCINL5T-s/s1600/World_News_9-1_jpg_614005t.jpg" /></a></div>
<br />
இப்படி ஒரு துன்பம் எமக்குத் தேவைதானா?...... நாம் எல்லோரும் இங்கு மனிதர்கள்தானே பிறர் வாழ வாழ்த்துவதாலும் பிறர் துயரைப் போக்க நல் வழி காட்டுவதாலும் உண்டாகும் சந்தோசத்திற்கு எல்லை ஏது!..... நல்லதைப் பேசி நல்லதையே செய்தால் உள்ளமும் வளம்பெறும் எம் உணர்வுகளும் தெளிவடையும். இனியும் பொல்லாங்கு பேசுவதைத் தவிர்த்து உள்ளன்போடு உறவுகளை மகிழ வைத்து நாமும் குறைந்தபட்சமேனும் மனிதர்களாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் .ஆதலால் விட்டுக்கொடுப்பு என்பது இயலாமை அல்ல அதுவும் ஓர் வீரச் செயலென எண்ணி எமக்குள் இருக்கும் போட்டி பொறான்மை ,வஞ்சகம் சூது சந்தேகம் ,தாழ்வுமனப்பான்மை ,களவு ,பொய் பேராசை ,போன்ற மனித பண்புக்கு இழுக்கான தீய குணங்களை அடியோடு வெறுத்து ஒதுக்கிவிட்டு அன்பை அகம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வாழ்வோமானால் அதுவே இந்த உலகத்தின் விடிவுக்கு வழி காட்டியாகும் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQQdepIhr3KXCrq0A71SKgn4MEiMGd0MbiNBDpMwEU9uiCL8QVThoxvS_sXO4gzULwqVowvE4VhvXyQPBhHNVp2_3WvcQ_KO-2Go0YkZOp8mi6naNyrxT8Nxhmqf2E0636QbEohx-WoEpY/s1600/yogaswamy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQQdepIhr3KXCrq0A71SKgn4MEiMGd0MbiNBDpMwEU9uiCL8QVThoxvS_sXO4gzULwqVowvE4VhvXyQPBhHNVp2_3WvcQ_KO-2Go0YkZOp8mi6naNyrxT8Nxhmqf2E0636QbEohx-WoEpY/s320/yogaswamy.jpg" width="249" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3P5z_TI7RqqrUOmI6lFjgr93tZt6qGsEtjwKXxeBr28bcdd-Pie-988QfPjw2YR5UQpR66iy5hvEigy-Ha1p0yooVFVMD5sSwCqE0veE0rNEnWkbLjW04wR91lpTQWx2E4gOMeVGpGEaC/s1600/yogaquotes1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3P5z_TI7RqqrUOmI6lFjgr93tZt6qGsEtjwKXxeBr28bcdd-Pie-988QfPjw2YR5UQpR66iy5hvEigy-Ha1p0yooVFVMD5sSwCqE0veE0rNEnWkbLjW04wR91lpTQWx2E4gOMeVGpGEaC/s400/yogaquotes1.gif" width="330" /></a></div>
ஒரு விசயத்தை நாம் எப்படித்தான் சொன்னாலும் அது அவ்வளவு சுலபமாக பிறரை சென்றடையாது .ஆனால் இந்த ஞானிகள் ஓரிரு வரிகளில் எவ்வளவு அழகாக சொல்லி முடிக்கின்றார்கள் பாருங்கள் !!!!.....இதுதான் வாழ்க்கையின் உண்மையான தத்துவம் .இதையேதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பது இன்றைய என் கருத்து .மிக்க நன்றி உறவுகளே தங்கள் வரவிற்கும் இனிய கருதுகளிற்க்கும் .<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYiic7b6qU4pO2l9Y9okyTDbD3n6wxKtJDdRW6mU9f-VEB6eRh2wFYs-KoMpzbQYrpwS_ytosltCCjZzLvot3wpICMvnFi1tBjTYZAq4obun3brBCjrURknBbPzIF0f14zPnd3eHdyKkc1/s1600/rVanakkam.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYiic7b6qU4pO2l9Y9okyTDbD3n6wxKtJDdRW6mU9f-VEB6eRh2wFYs-KoMpzbQYrpwS_ytosltCCjZzLvot3wpICMvnFi1tBjTYZAq4obun3brBCjrURknBbPzIF0f14zPnd3eHdyKkc1/s1600/rVanakkam.gif" /></a></div>
அன்பு உள்ளம் </div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-40344781275963931812012-08-31T14:41:00.000-07:002012-09-02T13:31:39.677-07:00பெரிது ....பெரிது.... பெரிது !!.......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHsbFVQ8ASRrHs4y9I726uek80il4UcMR-nj919BNwLBG2MPQNN8eru59UNf1FQhXFLfOKCTHAn3MhL6xJ76lKv2RN1nA8E1UVaQdCskbbHxh79fHDaMvmEUkM_jKENE8ervTYBHbZ1vPr/s1600/0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHsbFVQ8ASRrHs4y9I726uek80il4UcMR-nj919BNwLBG2MPQNN8eru59UNf1FQhXFLfOKCTHAn3MhL6xJ76lKv2RN1nA8E1UVaQdCskbbHxh79fHDaMvmEUkM_jKENE8ervTYBHbZ1vPr/s400/0.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<div style="text-align: justify;">
நான் பெரிதா ?...நீ பெரிதா ?...என் மதம் பெரிதா ?... உன் மதம் பெரிதா ??...இவ் உலகினில் இன்று உள்ள பெரும் குழப்பமே இதுதான் . தெரியாமல்தான் கேட்கின்றேன் இங்கு யார்தான் பெரியவர்கள் ?.... கற்றது கைமண் அளவு நாம் <span style="text-align: left;">கல்லாதது உலகளவு என்று உள்ளபோது அறிவை வைத்து ஒருவனை பெரியவன் இவன்தான் என்று எப்படி தீர்மானித்து விட முடியும் ?.....அப்படி முடியுமானால் அவன் எல்லாம் கற்றறிந்தவனாக அல்லவா இருத்தல் </span><span style="text-align: left;">வேண்டும் .உண்மையில் அதிகம் படித்தவர்கள் என்றுமே தன்னைத் தானே </span><span style="text-align: left;">அறிவாளி என்று காட்டிக்கொள்ள விரும்புவதில்லை .</span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"> பணம் படைத்தவன் அதிலும் பரம்பரை பரம்பரையாய் பணம் படைத்தவன் அவனும் எப்போதும் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து தன்னை பெரியவன் என்று எண்ண மாட்டான் .நல்ல குணம் படைத்தவன் அதி </span><span style="text-align: left;">வீரம் உடையவன் அவனும் தன்னை அவ்வாறு நினைக்க மாட்டான் .ஆக நாம் </span><span style="text-align: left;">வாழும் இந்த பூமியில் யாருக்கு அதிகமாக போட்டி மனப்பாண்மை உள்ளதோ அவகளுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருக்கும் .ஆரோக்கியமான சில </span><span style="text-align: left;">போட்டிகள் வாழ்வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதேபோன்று தேவை அற்ற வீண் விவாதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடிய மனித பண்பை </span><span style="text-align: left;">சீர்குலைக்கும் நோக்குடன் தொடரும் </span><span style="text-align: left;"> போட்டிகள் என்றுமே </span><span style="text-align: left;">எம்மை அழிவின் </span><span style="text-align: left;">பாதைக்கே இட்டுச் செல்லும் .</span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"> ஆக எமக்கு எல்லாம் தெரிந்தாலும் கூட எதுவுமே தெரியாதவர் போல் </span><span style="text-align: left;">பிறரை ஊக்குவிப்பதிலும் மேலும் பல நல்ல விசயங்களை தெரிய முற்படும் </span><span style="text-align: left;">போதும் எம்மை அறியாமலே அந்த மனிதர்கள் மீது ஒரு தனிப்பட்ட மரியாதை </span><span style="text-align: left;">வந்துவிடும் .இதை விட்டு விட்டு கீழ்த்தரமாக பிறருடன் எம்மை நாம் ஒப்பிட்டு ஒரு தகுதியை எமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளுதலும் பிறர் </span><span style="text-align: left;">செய்யும் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு நகைப்பதும் , </span><span style="text-align: left;">தன்னை மதியாதவரிடம் சண்டை போடுவதும் ,அவர்களை பிறர் மதித்து நடத்தல் கூடாது எனும் நோக்குடன் இல்லாத குற்றங்களை சுமத்தி அவமதிப்பதும் மனித </span><span style="text-align: left;">பண்புகளுக்கு என்றுமே </span><span style="text-align: left;">அப்பாற்பட்ட செயலாகும் .</span></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj37L-4-U3u2UIrPTY09If5wxQgEmuKl94ig90AcLRtDECKpRbvOvBejhRVT0P-sB06eQaIwuiy1ylqIgs7pE3T48eNNJ4aNVj2Q1ZqhXk8fDwOawb5PhgLMYIy3T7gP9DbOWlaFvurggBs/s1600/bible-verses-about-friendship.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj37L-4-U3u2UIrPTY09If5wxQgEmuKl94ig90AcLRtDECKpRbvOvBejhRVT0P-sB06eQaIwuiy1ylqIgs7pE3T48eNNJ4aNVj2Q1ZqhXk8fDwOawb5PhgLMYIy3T7gP9DbOWlaFvurggBs/s320/bible-verses-about-friendship.jpg" width="274" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="text-align: left;"><br /></span></div>
<br />
இறைவன் எவ்விடத்திலே வாழ்கின்றான்?...அவன் நல்ல பண்பு உள்ள இடத்தில் வாழ்கின்றான் ,அன்பு உள்ள இடத்தில் வாழ்கின்றான் தன்னை சந்தேகிக்காத இடத்தில் வாழ்கின்றான் . அவ்வாறு ஓர் இடம் உள்ளது<br />
என்றால் அது நிட்சயமாக குழந்தைகளின் மனமாகத்தான் இருக்க வேண்டும். ஆதலால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள். காரணம் அவர்களுக்கு அந்தப் பருவத்தில் போட்டி மனப்பாண்மை என்பது இருப்பதில்லை .பிறரை வஞ்சிக்கும் எண்ணம் எதுவும் இருப்பதில்லை. தெளிந்த நீரோடை என்பதே மழலைகள் மனங்கள்தான் . நாம் தெரியாத ஒன்றைப் பற்றி தெரிய முற்படும்போதுகூட எமக்கு அதிகம் தன்னடக்கம் இருக்க வேண்டும் .<br />
<br />
<br />
தன்னடக்கம் அற்ற பண்பு உடையவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைப்பது என்பது <br />
மிகவும் கடினமான ஒரு விசயம் .அவர்கள் எப்போதும் தான் சொல்வதே சரி என்று வாதிடும்<br />
வல்லமை பெற்றவர்களாய் மட்டும் இருப்பவர்கள். பிறரை முட்டாள் என்று கருதுபவர்கள்<br />
என்றுமே ஒரு நல்ல அறிவாளியாக இருக்க முடியாது. அறிவாளிகளின் பண்பே தான் அறிந்த<br />
ஒன்றைப் பிறரும் அறியும் வகையில் செயல்படுத்துவதே . ஒரு ஆசிரியர் அவர் இல்லை<br />
என்றால் எமக்கு அறிவுக் கண்களை திறந்து வைப்பவர் யார்?...நாம் கற்றது , கேட்டது கண்களால் <br />
கண்டுகொண்டவை இவைகள்தானே எம் அறிவின் மூலதனம்!!!..........<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig3Nr_aQ9_WHFJ51DkfpkJUiJEdk6BRpBvMsG-9-Z1VQcHsHe6JRm2V3fM2u2Fk0KwGslR5HX4rG9tWqx7WxVgeFxffW2psXfvO1yBo_WlturCHA4a46GLOkFPDKOibeUVkD0EtAyqqYMy/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEig3Nr_aQ9_WHFJ51DkfpkJUiJEdk6BRpBvMsG-9-Z1VQcHsHe6JRm2V3fM2u2Fk0KwGslR5HX4rG9tWqx7WxVgeFxffW2psXfvO1yBo_WlturCHA4a46GLOkFPDKOibeUVkD0EtAyqqYMy/s320/images.jpg" width="247" /></a></div>
<div style="text-align: justify;">
</div>
ஐம் புலன்களையும் அடக்கி அகிலத்தில் தான் இருக்கும் நிலை மறந்து மெய்ஞானத்தின்<br />
வழியே வாழ்வின் எல்லைகள் கடந்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகத்தை <br />
அளக்கும் சக்தி கொண்ட மா மனிதனே எம்மில் பெரியவன் .நாம் போற்றி மதிக்கப்பட<br />
வேண்டியவன் அவன் எமக்கு அருளிய தத்துவங்களே அறிவிற்கு அத்திவாரம் . இதனை <br />
பின்பற்ற மறந்தவர்கள் எவர்களாயினும் அவர்கள் வெறும் பதர்களே!!!...... நரிகளின்<br />
ஊளையைக் கேட்டு அஞ்சி நடுங்கும் ஐந்தறிவு ஜீவனாக நாம் வாழ்வதும் எம் தவறே <br />
ஆகும் . எப்போதும் எடுத்த காரியத்தில் தெளிவும் உறுதியும் இருத்தல் வேண்டும் . <br />
விமர்சனங்களுக்கு பயந்தோ அல்லது சுயலாபம் கருதியோ பலருக்கும் நன்மை <br />
பெயர்க்கும் செயலைக் கைவிடல் என்பது சிறந்த அறிவாளிகளுக்கு அழகல்ல .பலரும்<br />
பாராட்டக்கூடிய ஒரு செயல் அதை எல்லோராலும் செய்து விட முடியாது . <br />
இதற்க்கு எப்போதும் தடைக்கல் அதிகம் வந்து விழும் .அதையும் தாண்டி சாதிக்கும் வரை<br />
மனிதன் ஒரு போதும் ஓயாமல் உழைக்க வேண்டும் .<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieXLy41SAUHDb-YtU6HjJPhxkEoDqT4BEtNNGW9cs-tRvH61tKYgwpjczLQtLdx6PDjIgSApf-KTJQkukWtzHPsgxP7XipedYQfMlC6bN0HtbUlA6SZraV2FxZPx0ZySjNA-w5rb_WU-kk/s1600/thirukkural1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieXLy41SAUHDb-YtU6HjJPhxkEoDqT4BEtNNGW9cs-tRvH61tKYgwpjczLQtLdx6PDjIgSApf-KTJQkukWtzHPsgxP7XipedYQfMlC6bN0HtbUlA6SZraV2FxZPx0ZySjNA-w5rb_WU-kk/s640/thirukkural1.jpg" width="640" /></a></div>
<br />
<br />
<br />
<span style="text-align: justify;"> </span></div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-12714671193574418412012-08-29T15:42:00.000-07:002012-08-29T15:42:20.210-07:00எவன் தலை போனாலும் எனக்கென்ன?... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0ks1c1_Y4zrag1WVZgCA8bWCDPWJQLzTqALG2Ou5EEQ-pokB9svz62NQ2u5Hf-vZlTHO_sNC_VsgIfM9HBj2B1w_kKaXpLZgjdQ1octR5hfQCODWTCWGo8MAfHiJuLFH0IgwCOw_6exYT/s1600/friendshp%5B-quotes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0ks1c1_Y4zrag1WVZgCA8bWCDPWJQLzTqALG2Ou5EEQ-pokB9svz62NQ2u5Hf-vZlTHO_sNC_VsgIfM9HBj2B1w_kKaXpLZgjdQ1octR5hfQCODWTCWGo8MAfHiJuLFH0IgwCOw_6exYT/s400/friendshp%5B-quotes.jpg" width="400" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
அன்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது . நாம் வாழும் இந்த உலகத்தில் இதுவரை எத்தனை விதமான அனுபவங்களைக் கண்டிருப்போம். அதற்க்குக் காரணம் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்களாய் என்றுமே இருப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் எண்ணங்கள் வளர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆனாலும் நாம் வாழும் இப் புவிதனில் எம் வாழ்க்கை என்பது எப்போதும் பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் அமைவதே சிறப்பாக்கும் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுயநலம் மிக்க எண்ணங்கள் உடையவர்களாய் நாம் இந்த வாழ்வைத் தொடரும்போது எம் மனம் எப்போதும் ஓர் குறுகிய வட்டத்தினுள் மட்டுமே பிரவேசிக்க முடியும் என்பதையும் இதனால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள பல சந்தோசமான மன மகிழ்வைத் தரக்கூடிய உணர்வுகளை உறவுகளை என்றுமே இழந்துதான் விடைபெறுகின்றோம் என்பதையும் பலரும் நினைவில் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்து நடத்தல், வீணான யுத்தங்களை தவிர்த்தல். இயற்கையை ரசித்தல் .சக மனிதர்களின் உணர்வுகளை மதித்து நடத்தல் போன்ற சிறப்பான குணாதிசயங்களை நாம் என்றுமே வளர்த்துக்கொள்ளல் என்பது மிக மிக அவசியமான ஒன்று .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அது என்னவென்றால் அது வேறொன்றும் இல்லை. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடும்போது மனிதர்கள் கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர்கள் புரிந்துணர்வு அதிகம் உடையவர்கள் என்பதைத் தவிர இங்கே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என்னதான் இருக்கின்றது!இன்றைய காலத்தில் இந்த ஒரு சில உயர்ந்த பண்பும் அரிதாகிக்கொண்டே வருகின்றது என்பதை இங்கு நாம் எல்லோரும் அறிவோம். நாகரீகம் என்ற போர்வையில் சிதைந்து போகும் மனிதனின் பண்புகளைக் கண்டு நாம் மனம் நோகத்தான் முடியுமே தவிர வேறு வழிகள் ஏதேனும் உண்டா சொல்லுங்கள்?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும் பெயரும் புகழும் பெறுவதற்க்கென்றே மனிதன் பொய்யிலும் புரட்டிலும் உழல்கின்றானே இவன் செயல்களைக் கண்டு நாம் அமைதி கொள்வது என்பதும் எந்தவகையில் சாத்தியமாகும்?.. பதவி வெறியும் பொறாண்மையும் கொண்டு அலையும் மனிதன் அன்றாடம் செய்யும் தவறுகளால் இன்று உலகில் எத்தனை உயிர்கள் தினமும் பலியாகிக்கொண்டே இருக்கின்றது. இந்தப் பூமிப் பந்தில் அவதரித்த எம் இனத்தால் இன்று நடத்தப்படும் யுத்தங்களால் நாம் இழந்தவை எத்தனை எத்தனை !...மனிதன் மனிதனை சித்திரவதை செய்வதற்கென்றே எத்தனை விதமான கொடிய கண்டுபிடிப்புகளை மிகவும் சிரமப்பட்டு கண்டு பிடிக்கின்றான் !...ஆனால் மிருகங்கள் அவ்வாறு எதையும் கண்டு பிடித்ததுண்டா ?...தன்னை நெருங்கி வரும் மனித மிருகத்திடம் இருந்து எப்போதுமே தனக்கு ஒரு பாதுகாபிற்க்காகவே அவை எம்மைத் தீண்டுகின்றனவே தவிர எம்மைத் தேடி அலைகின்றனவா?....மனிதன் நினைக்கின்றான் உலகில் படைக்கப்பட்ட எல்லாமே முதலில் எனக்கு மட்டுமே சொந்தம் என்று.அதனால்தான் அவன் பிற உயிர்களை என்றுமே துச்சமாக மதித்து நடக்கின்றான் .ஆனாலும் நமது மூதாதையர் யார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம் .</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiGPYJJuVGGDv5j-170cYJL2ZZIZWEh21gTmv4r53BoliwMYjb__DXeURYLTvNKCCX6fzVdj_-okl9PoiVy5KC2hooXLKzM3NF0CkcCJk1omDfQxPo57IpjqrO3SYOsiIwkixSD65cDPK5/s1600/gorilla_pete_0023tfk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiGPYJJuVGGDv5j-170cYJL2ZZIZWEh21gTmv4r53BoliwMYjb__DXeURYLTvNKCCX6fzVdj_-okl9PoiVy5KC2hooXLKzM3NF0CkcCJk1omDfQxPo57IpjqrO3SYOsiIwkixSD65cDPK5/s320/gorilla_pete_0023tfk.jpg" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் கொஞ்சமேனும் உள்ளத்தால் நாம் வேறுபட்டு உள்ளோமா?......அடிக்கடி கொப்புக்கு கொப்பு தாவுவது எம் இனத்துக்கே உள்ள சிறப்புக் குணாதிசயம் .இது ஒன்றே போதும் எம்மை நாமே </div>
<div style="text-align: justify;">
இனம் கண்டு கொள்வதற்கு . பணமோ பதவியோ வாழ்வில் எம்மை என்றுமே உயரிய இடத்திற்கு கொண்டு செல்லாது .எம் மனம் எம் குணம் எப்போதுமே தூய்மையாக இருத்தல் வேண்டும். பிறரைப் பார்த்து நையாண்டி செய்வது எப்போதும் தனக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பது இதுபோன்ற தீய ஒழுக்கங்களால் மனித மனங்களில் ஒரு தேவை அற்ற வீண் விகார புத்தி தோன்றுவதால் வரும் துயர் என்பதை கணக்கில் இட்டால் என்றுமே தாங்காது. ஆக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிற்கு தன்னால் ஆகக் கூடிய எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது போனாலும் கவலை இல்லை. பிறருக்கு தீங்கு செய்ய நினைப்பதைக் கைவிட்டாலே அவன் புனிதனாக மண்ணில் மதிக்கப்படுவான். வாழ்வில் நாம் அனைவரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். எம் வாழ்க்கை என்பது எப்போதுமே நாம் திட்டமிட்டபடி நிகழ்வதில்லை. பல சமயங்களில் பெருத்த தோல்வியும் அவமானமும் எம்மைத் தேடி வரும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள எம் முயற்சிகள் யாவும் நேர்வழியைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர தவறான பாதையில் பிறரைப் பாதிக்கும் வகையில் என்றுமே நடந்துகொள்ளக் கூடாது என்பதே எனது ஆணித்தனமான கருத்து .</div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhasNP4eOsD70my40vqwOX71748Bc_LTJhK4uJ7AP4LSylABLHQH8ffBQ0UYD6L4gs9om1TCA3iWQTChoCO6QMEvAEmGs3_faf-uwsyH_RgPxDi_Q73tXfwCYKgv7h8OJ7CMYnF_sH-uHlS/s1600/imgres.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhasNP4eOsD70my40vqwOX71748Bc_LTJhK4uJ7AP4LSylABLHQH8ffBQ0UYD6L4gs9om1TCA3iWQTChoCO6QMEvAEmGs3_faf-uwsyH_RgPxDi_Q73tXfwCYKgv7h8OJ7CMYnF_sH-uHlS/s400/imgres.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
ஆயிரம் முறை முயற்சித்து ஒரு முறை கட்டிய வீடு ஆயினும் என்ன!..</div>
<div style="text-align: justify;">
போகி வந்ததும் துடைத்தெறியப்படும் வெறும் தூசி என்றே நினைப்பதால் </div>
<div style="text-align: justify;">
இதன் கனவுகள் கூட சிதைந்து போகும். ஆனாலும் முயற்சி மட்டும் </div>
<div style="text-align: justify;">
மேலும் மேலும் தொடரும் புதிய வெற்றிப்படிகளை நோக்கி !!!..................... </div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-18106595342040231302012-08-27T14:25:00.000-07:002012-08-28T01:04:21.893-07:00காலத்தால் அழியாத எழுத்துக்கள்!...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuIajZp_eC3LzTbzrQuVUobbqOeqKDhpwJItFym9c9jhdvg5cntApya2lM1dLE4wrq5ZcL6dF1iyBJbRQ2xJb-4I-3zjrU1wickVc3eDvS2p-KFgneHWsmY3sFU7kUU0Gu2-H24yg0UYHO/s1600/59932_1280410749721_1813638355_547214_2847850_n%5B1%5D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuIajZp_eC3LzTbzrQuVUobbqOeqKDhpwJItFym9c9jhdvg5cntApya2lM1dLE4wrq5ZcL6dF1iyBJbRQ2xJb-4I-3zjrU1wickVc3eDvS2p-KFgneHWsmY3sFU7kUU0Gu2-H24yg0UYHO/s400/59932_1280410749721_1813638355_547214_2847850_n%5B1%5D.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிப்பிக்குள் முத்தைப்போல் முடங்கிக் கிடக்கும் நினைவுகளை மெருகூட்டி</div>
<div style="text-align: justify;">
அழகிய சிந்தனையுடன் பிறரும் அறிந்து பயன்பெறும் வகையில் எழுதும் ஆக்கம் என்பதே சிறந்த ஆக்கம் என்று கருதக்கூடியவை.இந்தமாதிரி ஆக்கங்களை எப்போதும் எழுதுவதற்கு நாம் நிறைய விசயங்களைத் தெரிந்து </div>
<div style="text-align: justify;">
வைத்துக்கொள்ள வேண்டும் .இதற்காகவே பல அரிய நூல்களைத் தேடி தினமும் வாசித்தல் என்பது எமக்கு மிகவும் சிறப்பானதொரு பயனை அளிக்கும் .அன்றாடம் எம்மைச் சுற்றி நிகழும் நல்ல தகவல்களை சேகரித்து </div>
<div style="text-align: justify;">
அதன் அடிப்படையில் நாம் எம் கற்பனை வளம்கொண்டும் படைப்புகளை பிறர் மனம் பாதிக்காத வகையில் எழுதிக்கொள்ளலாம் . </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAXrrT5BzhXxyQHzjTliD63lWg4jmhWKV3x2L3y5RcPfuke5FObDtsenJmlWWNuNpKkTzsoon046fYoNLDnT2vfY1wjOxsn6u7y9OPsd0I0UF27NdscbvDDDTZcKNdF-jQNmxF5rYJ3zss/s1600/Gandhi_writing_1942.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAXrrT5BzhXxyQHzjTliD63lWg4jmhWKV3x2L3y5RcPfuke5FObDtsenJmlWWNuNpKkTzsoon046fYoNLDnT2vfY1wjOxsn6u7y9OPsd0I0UF27NdscbvDDDTZcKNdF-jQNmxF5rYJ3zss/s320/Gandhi_writing_1942.jpg" width="253" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுத்துக்கள் என்பது இந்த உலகத்தின் கண் போன்றது .பிறர் கொடுக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் இங்கு எம் தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் அன்றாட வாழ்வில் முயற்சிக்கின்றோம். அந்த வகையில் மனித நேயம் மிக்க நூல்கள் பல மகான்களால் எழுதப்பட்டு அதன் பயன்பாட் டினால் இந்த உலகம் மிகப் பெரிய நன்மைகளை இதுவரை அடைந்து கொண்டிருக்கின்றது என்பது இங்கு </div>
<div style="text-align: justify;">
நாம் அனைவரும் அறிந்த ஒரு உண்மை!...அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அலசி ஆராய்ந்து மிகத் துல்லியமாக எந்த ஒரு ஆக்கத்தையும் மக்கள் மனதில் ஆழமாய் பதியும் வண்ணம் எழுதி வைத்தார்கள். இன்றும் சிலர் இதுபோன்ற ஆக்கங்களைப் பின்பற்றி அ தன் சுவடுகள் அழியாத வண்ணம் எழுதி வருவதை நாம் அறிவோம் .அவரவர் அறிவுக்கு எட்டிய நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ளவே நாமும் முயற்சிக்க வேண்டும் அதைவிட்டு<br />
உண்மைக்கு முரணான தகவல்களையோ அல்லது மதங்களை இழிவுபடுத்தி எழுதும் ஆக்கங்களையோ தவிர்துக்கொள்ளல் வேண்டும் .கூரிய வாள்களை விடவும் கூர்மையானது எழுதுகோல் அதனால் .இதனை பயன்படுத்தும் நாமும் முதலில் எம் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கவிதை என்பது முழுக்க முழுக்க கற்பனைகளை மையமாகக் கொண்டது. பல கதைகளும் அவ்வாறுதான். ஆனால் செய்திகள் விமர்சனங்கள் அப்படி அல்ல.நோயுற்று இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்று எழுதுவது தனி மனித உரிமை மீறல் .இது பலரையும் பாதிக்கக்கூடிய விசயம். எமக்குத் தெரியாத ஒரு செய்தியை முழுமையாக ஆராயாமல் அதன் வெளித் தோற்றத்தை வைத்து திரிவுபடுத்தி எழுதுதல் என்பதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும். நாம் எழுதுகின்றோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைப்பது முற்றிலும் தவறான ஒரு விடயம். நல்ல ஆக்கங்கள் எப்போதும் வாசகர் நெஞ்சங்களை விட்டகலாது என்பதற்கு இந்தக் கடிதம்</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9qbzB69OYHpVCYnoANG26WhzX0V2Sr2cro-ILSpLF8-mfD_rq4SV92v_Z6u8mgiF8OYNxXjjJopTdzHcYg9dmVPZzGY8h9FVd-eMwoaTIODwXxPSHXPJx1ObPfbG4E5J7sKBM1otsqem-/s1600/PoetPattukottaiKalyanasundaram19301959.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9qbzB69OYHpVCYnoANG26WhzX0V2Sr2cro-ILSpLF8-mfD_rq4SV92v_Z6u8mgiF8OYNxXjjJopTdzHcYg9dmVPZzGY8h9FVd-eMwoaTIODwXxPSHXPJx1ObPfbG4E5J7sKBM1otsqem-/s320/PoetPattukottaiKalyanasundaram19301959.jpg" width="226" /></a></div>
கவிஞர் .பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0NbrwbW76akmHFBIBlWeo-YPg2-bFyNXEKnu4Q_0hCDriS3fJROZRC7fX1eup38ag0sGxGa8I_TrFZEdSzHfB9FNdVugnNiKy0CR9oXiWjmwcudxQys9Hs8GJ3khDuDrUECc9ogPvHpZM/s1600/Karunanidhiappreciationp.3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0NbrwbW76akmHFBIBlWeo-YPg2-bFyNXEKnu4Q_0hCDriS3fJROZRC7fX1eup38ag0sGxGa8I_TrFZEdSzHfB9FNdVugnNiKy0CR9oXiWjmwcudxQys9Hs8GJ3khDuDrUECc9ogPvHpZM/s400/Karunanidhiappreciationp.3.jpg" width="275" /></a></div>
ஒரு நல்ல உதாரணமாக என் மனக் கண்ணில் பட்டது. அதனால்தான் இன்று இந்த ஆக்கத்தை எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டேன் வலைத்தளத்தில் எழுதிவரும் நாமும் எம் ஆக்கங்களை கொஞ்சம் ஆய்வு செய்து தரமான ஆக்கங்களை வெளியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே என் எண்ணக் கருத்தாகும் .<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBbj1tyXzMRw7PsTwGL4fgFxVO1m7OEOAJnSNJPsXbcxhUR3JFvn1vzqXxDiBbrBf8T_-NovAxBGFecARjP_wNzMqbCceaiWRX6GhqKZnj6uUpE9ZUXOYE99lxbuvUcuZUET-lpt3jXEOX/s1600/Animated-Bird-1.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBbj1tyXzMRw7PsTwGL4fgFxVO1m7OEOAJnSNJPsXbcxhUR3JFvn1vzqXxDiBbrBf8T_-NovAxBGFecARjP_wNzMqbCceaiWRX6GhqKZnj6uUpE9ZUXOYE99lxbuvUcuZUET-lpt3jXEOX/s320/Animated-Bird-1.gif" width="279" /></a></div>
அறிவெனும் சுடர் மிளிர<br />
அன்பெனும் மை திரட்டி<br />
தெளிவுற நற் கருத்தை<br />
சிந்தனைக்கு அடி பணிந்து<br />
<br />
அறநெறி தனில் நின்று பிறர்<br />
அகம் அது குளிர்ந்திடவே<br />
தினம் ஒரு கவி பாடி எம்<br />
செந்தமிழதை வளர்த்திட வாரீர்!!!....<br />
<br />
<br />
</div>
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-48941818185079537442012-08-26T15:54:00.000-07:002012-08-26T15:54:57.177-07:00வசந்த மண்டபம்!... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Qso9cx7pQ-A_mDoHDCVflnKS4YmYkVpUoSgybeLZ5Hs3KMul5bOqPRLzt1iFSePj5H1vAbn_k6Nq4IulPb_nxpkRnCF5LZh3AmwdRVhRtFxiMAqQeINC4XCeSuNLY9cwYhGzqwGPNj4P/s1600/nature_widescreen_wallpapers_0610_0012-1440x900.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Qso9cx7pQ-A_mDoHDCVflnKS4YmYkVpUoSgybeLZ5Hs3KMul5bOqPRLzt1iFSePj5H1vAbn_k6Nq4IulPb_nxpkRnCF5LZh3AmwdRVhRtFxiMAqQeINC4XCeSuNLY9cwYhGzqwGPNj4P/s400/nature_widescreen_wallpapers_0610_0012-1440x900.jpg" width="400" /></a></div>
<span style="color: #274e13;"><b><br /></b></span>
<span style="color: #274e13;"><b>இசை பாடும் குயிலுக்கு </b></span><br />
<span style="color: #274e13;"><b>வசந்த மண்டபம் காடுதானடா!...</b></span><br />
<span style="color: #274e13;"><b>இதமான காற்றுக்கும்</b></span><br />
<span style="color: #274e13;"><b>வசந்த மண்டபம் காடுதானடா!...</b></span><br />
<span style="color: #274e13;"><b><br /></b></span>
<span style="color: #274e13;"><b>அசைகின்ற பூமிக்கு </b></span><br />
<span style="color: #274e13;"><b>வசந்த மண்டபம் காடுதானடா!...</b></span><br />
<span style="color: #274e13;"><b>அகிலத்தில் உயிர்களுக்கே </b></span><br />
<span style="color: #274e13;"><b>வசந்த மண்டபம் காடுதானடா!...</b></span><br />
<span style="color: #274e13;"><b><br /></b></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigrQdElbvipQPhTjZxx1I7tU8tqWpBXiaK9XRCGptCebybnAmPO4wSbR6wWjRRbQxl-Qox_Do8pjMOzu-qktQCc-jXg__gTEoVLp89eOdPeMRdp0a0tccskCKBw2PmkhRR0dYQOXKfVyUV/s1600/5853547-home-for-sale-sign-in-front-of-new-house.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="205" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigrQdElbvipQPhTjZxx1I7tU8tqWpBXiaK9XRCGptCebybnAmPO4wSbR6wWjRRbQxl-Qox_Do8pjMOzu-qktQCc-jXg__gTEoVLp89eOdPeMRdp0a0tccskCKBw2PmkhRR0dYQOXKfVyUV/s320/5853547-home-for-sale-sign-in-front-of-new-house.jpg" width="320" /></a></div>
<b><span style="color: #990000;"><br /></span></b>
<b><span style="color: #990000;">புது வீடு கட்டிக் கட்டி </span></b><br />
<b><span style="color: #990000;">ஏசி போட்டாச்சு எதுவும் </span></b><br />
<b><span style="color: #990000;">புரியாமல் காடுகளை </span></b><br />
<b><span style="color: #990000;">தினமும் வெட்டி விட்டாச்சு!!....</span></b><br />
<b><span style="color: #990000;"><br /></span></b>
<b><span style="color: #990000;">மணல் அள்ளிக் கடற்பரப்பை </span></b><br />
<b><span style="color: #990000;">அகட்டி விட்டாச்சு !!!!..............</span></b><br />
<b><span style="color: #990000;">மழை நீரின் வருகைக்கும் </span></b><br />
<b><span style="color: #990000;">முற்றுப் புள்ளி வச்சாச்சு!!.....</span></b><br />
<b><span style="color: #990000;"><br /></span></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1M-YUHvBc9eBBREdnZH6pXyVxOfYgahSpc0hLnNcFQTHyYJbGnqLXYG0FJsa3n3N_tHjEHrEdHOhG7_g9p3Mc27hL1k7mCBN3wFehf-60tM3nhL9Oq-WJgtnDr_qXyiWh7NYOIztZlUYV/s1600/nuclear-bomb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="269" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1M-YUHvBc9eBBREdnZH6pXyVxOfYgahSpc0hLnNcFQTHyYJbGnqLXYG0FJsa3n3N_tHjEHrEdHOhG7_g9p3Mc27hL1k7mCBN3wFehf-60tM3nhL9Oq-WJgtnDr_qXyiWh7NYOIztZlUYV/s320/nuclear-bomb.jpg" width="320" /></a></div>
<br />
<b><span style="color: #990000;">தினந்தோறும் குண்டு தள்ளி </span></b><br />
<b><span style="color: #990000;"> நம் நிலம் அதிர்ந்தாச்சு!!!......</span></b><br />
<b><span style="color: #990000;">தீ வந்து எமைத் தாக்க</span></b><br />
<b><span style="color: #990000;">நல் வழி வகுத்தாச்சு!!!....</span></b><br />
<b><span style="color: #990000;"><br /></span></b>
<b><span style="color: #990000;">உலகத்தைக் கைக்குள்ளே </span></b><br />
<b><span style="color: #990000;">கொண்டு வந்தாச்சு இனி </span></b><br />
<b><span style="color: #990000;">உயிர் வாழ வழியின்றி </span></b><br />
<b><span style="color: #990000;">பெரும் குழி ப</span></b><b><span style="color: #990000;">றி</span></b><b><span style="color: #990000;">ச்சாச்சு!....</span></b><br />
<b><span style="color: #990000;"><br /></span></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAha1ENVAe2DRUdRzZ1kjQEjLAVbbZ0XGgcMx4rw4YmNP5Rz9BRDiOTYxELRiC2kpbqh6D_BzgnGm30h0hFu1iYeiL0-rpE2Zy6QEKU5CXANR2abkybU9HwppmYNAMx8I5T6eSbqYiwy8N/s1600/climate_change_world_in_hand.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="299" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAha1ENVAe2DRUdRzZ1kjQEjLAVbbZ0XGgcMx4rw4YmNP5Rz9BRDiOTYxELRiC2kpbqh6D_BzgnGm30h0hFu1iYeiL0-rpE2Zy6QEKU5CXANR2abkybU9HwppmYNAMx8I5T6eSbqYiwy8N/s320/climate_change_world_in_hand.png" width="320" /></a></div>
<b><span style="color: #990000;"> </span></b><br />
<b>அரிதான உயிரினகள் பல </b><br />
<b>அழிஞ்சு போயாச்சு!!.........</b><br />
<b>நம்ம அடையாள சின்னங்களும்</b><br />
<b>துலைந்து போயாச்சு!....</b><br />
<b><br /></b>
<b>இடர் வந்து நெஞ்சுக்குள்ளே </b><br />
<b>ஓட்டிக்கொண்டாச்சு!...........</b><br />
<b>அதிலும் உலகத்தின் அழிவுக்கும் </b><br />
<b>இங்கு தேதி குறிச்சாச்சு!!!....</b><br />
<b><br /></b>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlD5NbloDgTIHQ52Jat3hVet3uNb0d8dhgaEYVuZPHBXLQ5ysl0yR8d7fo5B7GlEb3y-jYu4uW9CYrkfKtJvFzQ3Jxp-HenR5EfxxHDNH7DrNrknskxyCrDjyGfGUtAMX9CJIEXiVC5ucc/s1600/end-of-the-world.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlD5NbloDgTIHQ52Jat3hVet3uNb0d8dhgaEYVuZPHBXLQ5ysl0yR8d7fo5B7GlEb3y-jYu4uW9CYrkfKtJvFzQ3Jxp-HenR5EfxxHDNH7DrNrknskxyCrDjyGfGUtAMX9CJIEXiVC5ucc/s1600/end-of-the-world.jpg" /></a></div>
<br />
<b>இது நடந்தாலும் நடக்கலாம் </b><br />
<b>இந்நாளிலே எதற்கும் நாம் </b><br />
<b>இருக்கின்ற காலத்தைப் </b><br />
<b>பொன்போல் எண்ணி </b><br />
<b><br /></b>
<b>மனித வளம் காக்கும் </b><b>செல்வம் </b><br />
<b>அதைக்(கொச்சம்) </b><b>காத்து நிற்ப்போமே </b><br />
<b>எதற்கும் மறக்காமல் அன்போடு </b><br />
<b>நாம் மனிதர்களாய் வாழ்ந்திடுவோமே!....</b><br />
<b><br /></b>
<b><span style="color: #274e13;">டிஸ்கி:என் தளத்தின் வடிவமைப்பு .</span></b><br />
<b><span style="color: #274e13;"></span> <span style="color: #274e13;">இது ஒரு காடு நீங்கள் கருத்திடும் </span></b><br />
<b><span style="color: #274e13;"></span> <span style="color: #274e13;">இடம்கூட அந்த மரத்தின்</span></b><br />
<b><span style="color: #274e13;"> உடல் மீதுதான்!!!................ </span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQa6EzVrz-X6cXgdbooBKMoRmfZU856d-jICnAptsGmxOUVdMP4bLxNvO_DBugDCeduAaDUYWW5Nvsc-EqKKcrCwD9VjTOYh6L_U7xXf8YHUD4a6xw6J86YiHefNKzuCW_Br1dsBXXqwNM/s1600/202036_213809975312009_100000490232524_871442_2525790_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQa6EzVrz-X6cXgdbooBKMoRmfZU856d-jICnAptsGmxOUVdMP4bLxNvO_DBugDCeduAaDUYWW5Nvsc-EqKKcrCwD9VjTOYh6L_U7xXf8YHUD4a6xw6J86YiHefNKzuCW_Br1dsBXXqwNM/s320/202036_213809975312009_100000490232524_871442_2525790_o.jpg" width="320" /></a></div>
<b><span style="color: #274e13;"> இந்த புதிய வசந்த மண்டபத்திற்கு உங்களை </span></b><br />
<b><span style="color: #274e13;"> வருக வருக என்று வரவேற்கின்றேன் அன்பு </span></b><br />
<b><span style="color: #274e13;"> உறவுகளே </span></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4vYBpH-vLeD87abAhEHf0-W112FvkbAeDFNdXEJfSRz4s0Jgt_Yj-3LGe2Mcmwfb4GWPVPP8ijLRVOZ28IJAEqdA-sXRw-OhDCXG1h93ll7rzoZMuiUNAOvMvBOEL8LyRzbvf5D6Cr3mx/s1600/dep_1335570-Flower-in-hand.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4vYBpH-vLeD87abAhEHf0-W112FvkbAeDFNdXEJfSRz4s0Jgt_Yj-3LGe2Mcmwfb4GWPVPP8ijLRVOZ28IJAEqdA-sXRw-OhDCXG1h93ll7rzoZMuiUNAOvMvBOEL8LyRzbvf5D6Cr3mx/s320/dep_1335570-Flower-in-hand.jpg" width="320" /></a></div>
<b> </b><br />
<b><span style="color: #274e13;"> </span></b></div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-48736699341238863242012-08-24T12:50:00.002-07:002012-08-24T12:50:16.025-07:00இப்படியா அப்படியா வேறு எப்படி....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1s-yFb1D5rh_fM1eBWhNFQ3wqTpQRflhqOmaj7N9mx_LtRWwCySKzpr-ug96UfvrLc6Vp7lbmagTRCCVLs1CRgbA8wPys0wcdrHW-39KLnioMhwBSINrB7V_CtQV_gp9BJruv35wu5Zn-/s1600/animierte-babys-bilder-116.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1s-yFb1D5rh_fM1eBWhNFQ3wqTpQRflhqOmaj7N9mx_LtRWwCySKzpr-ug96UfvrLc6Vp7lbmagTRCCVLs1CRgbA8wPys0wcdrHW-39KLnioMhwBSINrB7V_CtQV_gp9BJruv35wu5Zn-/s320/animierte-babys-bilder-116.gif" width="313" /></a></div>
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு எனில் இந்த உலகத்தில் நாம்<br />
பிறக்கும் போதே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வந்து பிறக்கின்றோமா?.<br />
அல்லது இறக்கும் போது எதுவுமே கற்றுக் கொள்ளாமல் இறக்கின்றோமா?...<br />
அவரவர் சக்திகேற்றது எதையோ தன் தேவை கருதி மனிதன் கற்கின்றான்<br />
அவன் கற்றுக் கொண்ட அறிவை வைத்துக்கொன்டுதானே அவனும் தனது<br />
அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான் .அப்படி இருக்கையில் நாம்<br />
அறிவாளி முட்டாள் என்ற பேதங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாமா!.<br />
தெரியாததைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பவனே திறமைசாலி.ஆனாலும்<br />
எனக்கு எதுமே தெரியாது தெரிந்துகொள்ளவும் ஆர்வம் கிடையாது எனில்<br />
இப்பேர்ப்பட்ட மனிதர்கள் எவ்வாறு தம் வாழ்வை வெற்றிகொள்ள முடியும்?..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHgzltr72hsC6uk9f6Esi_XBPmPPJGSVu6vGttXbOKmOcAvZ3wpGezrIxUbva9A5UbK_nk9xmIco1HDi1afX0XQFBXBIqsP_kJmfCEgrl1UUdsbZmo3-7m6LViWm7aBk51ACgGpH_QJM9r/s1600/304376.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHgzltr72hsC6uk9f6Esi_XBPmPPJGSVu6vGttXbOKmOcAvZ3wpGezrIxUbva9A5UbK_nk9xmIco1HDi1afX0XQFBXBIqsP_kJmfCEgrl1UUdsbZmo3-7m6LViWm7aBk51ACgGpH_QJM9r/s400/304376.jpg" width="400" /></a></div>
<br />
இங்கு குறைகளை சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துபவர்கள் மனிதர்கள் குத்திக்காட்டி திசை திருப்புபவர்களை எவ்வாறு சொல்வது!........<br />
பிறந்த குழந்தை பிறந்த கணமே தவழ்ந்ததாகவோ ஓடியதாகவோ உலகில்<br />
ஒரு நிகழ்வு எங்கேனும் கேள்விப் பட்டதுண்டா?...ஆக ஒரு மனிதன் தனக்கு<br />
தெரியாதவற்றை தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஆயிரம் தவறுகள்<br />
நிகழாலாம் ஒரு வேளை நாம் எடுக்கும் முயற்சிகள்கூட தோல்வியுறலாம்.<br />
அதற்காக நாம் எதையும் கற்றுக்கொள்ளத் தகுதி அற்றவர்கள் என்று எம்மை<br />
நாமே புறக்கணித்தல் முறைதானா?...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDKmQy-caj9kINIZxyl_xvEK0faVmcka54i7gann4_tLQSlwMsVV1Fnmwkq_72tEP7gMS3_qTLfkTA_lkpdrUebo97IQf4fjN6ZlWQO8-kdn4Z-H8i86qTpII1Y6uFbjPIMR-LNUys-2-a/s1600/draft_lens11030451module160314164photo_1342073422aa__a.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDKmQy-caj9kINIZxyl_xvEK0faVmcka54i7gann4_tLQSlwMsVV1Fnmwkq_72tEP7gMS3_qTLfkTA_lkpdrUebo97IQf4fjN6ZlWQO8-kdn4Z-H8i86qTpII1Y6uFbjPIMR-LNUys-2-a/s320/draft_lens11030451module160314164photo_1342073422aa__a.png" width="300" /></a></div>
எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியை இப்போதுதான்<br />
எமக்குள்ளே நாம் வரவளைத்துக்கொள்ளல் வேண்டும் . எம் தேவைகளை<br />
நாமே பூர்த்தி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் .அடுத்தவர் தயவில் எம்<br />
வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தால் எமது எதிர்காலம் என்பது என்றுமே<br />
எமக்கு அர்த்தமற்றதாகவே அமையும் . வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட<br />
நாம் எம்மைப்போல் அல்லாது எமது சந்ததியினரை வளப்படுத்த சிற்சில<br />
பயிற்சிகளை அவர்களுக்கும் நாம் குழந்தையில் இருந்தே வழங்கி வர வேண்டும் .<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiplwl32Hqy-iyII9dq3yNgM4IDX0omfoU8OhM5HOtyHiG3oeUYmguFkJlgMOxy5PdvBT4e0BFA0m0xhv-OnbZw0SM6CvJOvPqHEOgDumG9ItPxW60-TYc4cxDmZSHRnZQ6mAmxxHv-yvpH/s1600/Alte-Kinderspiele-heute-noch-modern.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiplwl32Hqy-iyII9dq3yNgM4IDX0omfoU8OhM5HOtyHiG3oeUYmguFkJlgMOxy5PdvBT4e0BFA0m0xhv-OnbZw0SM6CvJOvPqHEOgDumG9ItPxW60-TYc4cxDmZSHRnZQ6mAmxxHv-yvpH/s400/Alte-Kinderspiele-heute-noch-modern.jpg" width="400" /></a></div>
<br />
சிறு பிள்ளைகளை அதட்டுவதோ அல்லது எதற்கு எடுத்தாலும் பயம்<br />
உறுத்தி வளர்ப்பதோ மிகவும் தவறான காரியம் என்பதை நாம் நன்கு<br />
உணர வேண்டும் .சின்ன வயதில் இருந்தே எதற்கும் பயந்த சுபாவம்<br />
உடையவர்களாய் வளரும் குழந்தைகள் படிப்பிலும் சரி பிறருடன் பேசிப்<br />
பழக , தனக்கு வரும் சந்தேகங்களை ஆசிரியரிடமோ அல்லது உறவினர்<br />
நண்பர்களிடமோ கேட்பதக்கும் மிகவும் கூச்சப் படுவார்கள் .இதனால்<br />
எதையும் அறியும் தன்மையும் ,வெளிக்காட்டும் தன்மையும் இவர்களிடம்<br />
என்றும் குறைவாகவே இருக்கும் .எனவேதான் ஐரோப்பா நாடுகளில்<br />
சிறு பிள்ளைகளுக்கு பாடசாலை ஆரம்பிக்கும் முன்பே பிள்ளைகளுடன்<br />
சேர்ந்து விளையாடுவதற்கும் ,விளையாட்டு மூலம் கல்வி பயிலவும் <br />
இரண்டு வருட பயிற்சி வழங்கிய பின்னர் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்<br />
கொடுக்கின்றனர் .பிள்ளையின் துணிச்சல் ,ஒழுக்கம் ,ஆக்கத் திறன் என<br />
அனைத்தும் பார்த்தே இவர்களின் வகுப்புத் தரமும் பிரிக்கப் படுகின்றது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHz-vw4Y7_91MLHFPZoMUaL0m5zxK5Ki_DoKk2tSuyf0Cpqj8XS8wBotddELdFlQJVJcIw4uGfpj-mnZ-q_YNI4nXEVCtHA1hQsSwVjWEUtGT4K_CZZWkSZ9Joe_w_VVkCiJ45KtI20fgV/s1600/1289550898080l.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHz-vw4Y7_91MLHFPZoMUaL0m5zxK5Ki_DoKk2tSuyf0Cpqj8XS8wBotddELdFlQJVJcIw4uGfpj-mnZ-q_YNI4nXEVCtHA1hQsSwVjWEUtGT4K_CZZWkSZ9Joe_w_VVkCiJ45KtI20fgV/s320/1289550898080l.jpg" width="320" /></a></div>
<br />
பயங்கரமாய்க் குளிரும் ஆனால் இவர்களுக்கு!..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsLAAtkWwL-LzCiyj6c9HgNdBwIivxGD0FP5a4Sn8vmboYCn_1xvdEzQvOArBRZx5Dj73cIcpm6tgYFgOBRVJnts4QL7_BNsKs0Lr2ptRnRmp3ulCed7Hv4AV18BecqjpVyrZ6PcBAkazM/s1600/sf1121_034_men_abenteuer.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsLAAtkWwL-LzCiyj6c9HgNdBwIivxGD0FP5a4Sn8vmboYCn_1xvdEzQvOArBRZx5Dj73cIcpm6tgYFgOBRVJnts4QL7_BNsKs0Lr2ptRnRmp3ulCed7Hv4AV18BecqjpVyrZ6PcBAkazM/s320/sf1121_034_men_abenteuer.jpg" width="320" /></a></div>
<br />
தம்பி வேணாம்டா ராசா விழுந்தா நீ செத்திருவ !!!.. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbRV3g_Ub4qCZYVdEhNY3tZyRy5kmkE_U7sWdvehVHQbqYERswUPONmr_lwaEoiET2xzuYybI2wEcOUcX8nXCqT8Pk_sOn1LO4vsk_4GyDujfh2TvAxQnxvaIKnfbbvJNiMYFLJRTcUIvR/s1600/allein-essen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbRV3g_Ub4qCZYVdEhNY3tZyRy5kmkE_U7sWdvehVHQbqYERswUPONmr_lwaEoiET2xzuYybI2wEcOUcX8nXCqT8Pk_sOn1LO4vsk_4GyDujfh2TvAxQnxvaIKnfbbvJNiMYFLJRTcUIvR/s320/allein-essen.jpg" width="320" /></a></div>
<br />
அட பாவமே பச்சக் குழந்த தனியா சாப்பிடுதே!!!... <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzLHaTbgzFDXe4O70MwNWKByJuh5Gg16KvSdbkAEaJE1nQ53204R8NYRNCiAE0l4xoiINl75To4eZWSyWF-kwo6fovawTh0FsOwf5348CWpN5X8XehbyWjtBDkE3AqzMlB5ZyT-A7rDCm2/s1600/628x471.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzLHaTbgzFDXe4O70MwNWKByJuh5Gg16KvSdbkAEaJE1nQ53204R8NYRNCiAE0l4xoiINl75To4eZWSyWF-kwo6fovawTh0FsOwf5348CWpN5X8XehbyWjtBDkE3AqzMlB5ZyT-A7rDCm2/s400/628x471.jpg" width="400" /></a></div>
<br />
என்ன இருந்தாலும் கடின உழைப்பாளிகள் நம்ம ஆளுங்கதான்!!!.....<br />
இதை மேலும் வளப்படுத்த வேண்டும் எனில் அச்சம் தவிர்த்து எம்<br />
அன்பால் வெல்வோம் .நாளைய சமுதாயத்தின் விடிவெள்ளிகள்<br />
இவர்கள் என்பதைக் கருத்திக்ல்கொண்டு .. <br />
</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-58122226691035324392012-08-19T08:16:00.000-07:002012-08-24T03:16:02.785-07:00அம்மா இதுதான் அன்பின் இல்லம்!.. .<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIoPOma-BgD1xIF-5aSOvrtzJGfVA_17jJBvRunaKSUUbAgZ-7IBOcPDMV_b-49RLb2QeFAFHNULaQFW1FI052NuuWmYmNknr5m-wN5I_o1htcyoB0no3B5BSZzNvulL5p85i3QoFKskb6/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="270" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIoPOma-BgD1xIF-5aSOvrtzJGfVA_17jJBvRunaKSUUbAgZ-7IBOcPDMV_b-49RLb2QeFAFHNULaQFW1FI052NuuWmYmNknr5m-wN5I_o1htcyoB0no3B5BSZzNvulL5p85i3QoFKskb6/s400/1.jpg" width="400" /></a></div>
<br />
<br />
அம்மா கருவறையில் எம்மை சுமந்த கணமே தன்னை அன்பெனும் சிறை அறைக்குள் <br />
பூட்டிக் கொள்பவள். அகிலத்தில் இவள்போன்று அன்பு செய்ய யாருண்டுசொல்லுங்கள்?.<br />
வறுமையிலும் எளிமையான தோற்றம் உடையவள் .பொறுமைக்கு ஆதார சக்தியே <br />
இவள்தான். சிறு பிள்ளைத் தனமாய் நாம் கொடுக்கும் கஸ்ரங்கள் நஸ்ரங்கள் எல்லாமே <br />
இவளின் கண்களுக்கு வேதனையைக் கொடுக்கும் அல்லால் கோவத்தை உண்டு <br />
பண்ணாதே!.. .அடுக்களையில் அடைந்து கிடந்து எம்மை எல்லாம் மனம் குளிர வாழ <br />
வைப்பவளும் அவள்தானே. ஈரேழு ஜென்மங்கள் ஆனாலும் எமை ஈன்று எடுத்தவள் <br />
கடன் தீர்க்கவா முடியும்!..அப்படி இருக்கும் போது எம்மைச் சுமந்தவளை எதிர் காலத்தில்<br />
நாம் சுமப்பதுதானே மனிதத் தன்மை!..வரம் கொடுக்கும் சாமிக்குக் கூட காணிக்கை<br />
கொடுத்து பழக்கப் பட்டவர்கள் நாங்கள் .எம்மையே தன் வரமாக நினைத்து வாழ்ந்த <br />
இந்த சாமிக்கு நாம் செய்ய வேண்டிய பணிவிடைகள் ஏராளம் இருக்கின்றதே. அப்படி <br />
இருக்க ஒரு வேளை உணவு கொடுக்கவும் ஒதுங்க ஒரு இடம் கொடுக்கவும் சினம்<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiSEZSEzU6BCQXZj0enrM941kDIrTLXZxrk9XCD3kgRCjLbLmIYZYGl3lcUHQVpLk-Ku0AQFWfLpVyX9yFij4bv0IfH03vsfJQFINigaMpeJzkbX1doAnGCV2Yv4Iby-kcC38Bo0bfD8x4/s1600/kitne-door-kitne-paas-wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiSEZSEzU6BCQXZj0enrM941kDIrTLXZxrk9XCD3kgRCjLbLmIYZYGl3lcUHQVpLk-Ku0AQFWfLpVyX9yFij4bv0IfH03vsfJQFINigaMpeJzkbX1doAnGCV2Yv4Iby-kcC38Bo0bfD8x4/s320/kitne-door-kitne-paas-wallpaper.jpg" width="320" /></a></div>
<br />
கொள்ளலாமா?.... தன் கருவறையில் இடம் கொடுத்தவள் தாய் அன்று. இன்று தன் <br />
மகன் தனக்கு இல்லை என்று தெரிந்த பின்னால் வரும்துயர் அதை நாம் <br />
அறிந்திருக்க வேண்டாமா!... வந்த பெண்ணை வாழவைக்க நினைக்கும் ஆண் மகன்<br />
தன்னை பெற்று வளர்த்தவளை எந்த ஆதரவும் இன்றி தவிக்க விடலாமா?.. கட்டிய<br />
மனைவிக்கு கோவம் வந்தால் அவளுக்கு அவள் தாய் வீடு உள்ளது அது போல் எம்மைப் <br />
பெற்றெடுத்தவள் அவள் எங்கு போவாள் ?...மகன் மருமகன் ஆகிக் காட்டும் அன்பில் <br />
சிறு பங்கேனும் தன் தாய் மீது காட்ட மறந்தால் பெற்றவளுக்கு இதை விட பெரிய<br />
தண்டனை என்னதான் இருக்க முடியும்?..எம் வசந்த கால கனவுகள் வானில் சிறகடித்துப் <br />
பறக்கலாம்.ஆனாலும் கடந்த காலம் எல்லாமே கண்ணை விட்டு மறைவதுதான் தவறு. <br />
ஒரு பிள்ளை பெற்றெடுத்து வளர்ப்பதற்குள் அவர்களைப் பெற்றவர்கள் படும் துன்பம்<br />
என்பது அளவிட முடியாத ஒன்று.... அதனிலும் கொடியது நாம் இன்று அவர்களை <br />
முதியோர் இல்லத்திலும் தன்னந் தனிமையிலும் விட்டு விட்டுச் செல்லுதல்தான் .<br />
மிகவும் வேதனையான ஒரு சம்பவம் கடந்த சில நாட்களின்முன் நான் ஓர்<br />
முதியோர் இல்லம் சென்றிருந்தேன் . எனக்குத் தெரிந்தவர்கள் அங்கு இருக்கின்றனர்<br />
என்று அறிந்து அவர்களைப் பார்ப்பதற்காக .பாவம் ஒரு எண்பத்தைந்து வயது மதிக்கத்<br />
தக்க அம்மா ஒருவரை நான் அங்கு சந்திக்க நேர்ந்தது கிட்டத் தட்ட நான்கு <br />
வருடங்களாக அவர் தனிமையில் ஒரு அறையில் விடப்பட்ட நிலையில் புத்தி <br />
சுவாதீனம் அற்று இருப்பதை அறிந்தேன், அங்கு சென்ற எனக்கு ஓர் அதிர்ச்சியான தகவல்<br />
கிட்டியது. இது ஒரு ஐரோப்பா நாடு ஒன்றில் உள்ள வயோதிபர் இல்லம் . இங்கு பணி<br />
<br />
புரிபவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள்தான் .அந்த அம்மாவிற்கு அங்கு சென்று<br />
பார்க்க பிள்ளைகள் இருவர் இருந்தும் அவர்கள் எப்போதோ ஓரிரு தடவைகள் வந்து <br />
போனதாகவும் அந்த அம்மாவைக் கவனிக்க யாரும் இல்லை என்றும் மிகவும் <br />
வேதனையுடன் சொன்னார்கள் . தாங்கள் அங்கு கொடுக்கும் உணவுகூட<br />
(வெள்ளைக்காரரின் சாப்பாடு அது )அவர் விரும்பி சாப்பிடு வதில்லை என்றும் அவருக்கு<br />
எமது நாட்டு சாப்பாடுதான் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார்கள் அதைக் கேட்டு<br />
நானும் அவருக்கு அந்தசாப்பாட்டை கொண்டு வந்து கொடுக்கலாமா?. என்று கேட்டதற்கு<br />
மிகவும் வேதனையுடன் சொன்னார்கள் அப்படி கொடுத்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு<br />
எப்போதும் கிட்டும் என்று!!!.............<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRtCEz_Kzkhm88YhSIb6f6lsMyAZOhErxhawmLf6vWX6zfffWlyZILm6D0Bno0hdJYH_9pYluCyZofzZt3m4s48x4tVS5a_WebFpXleKL73L3_KTXYRbRNw9a7oWKZu8tWdvxFnjIpzQlM/s1600/Cute-Cat-Happy-Mothers-Day-Special-Picture.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRtCEz_Kzkhm88YhSIb6f6lsMyAZOhErxhawmLf6vWX6zfffWlyZILm6D0Bno0hdJYH_9pYluCyZofzZt3m4s48x4tVS5a_WebFpXleKL73L3_KTXYRbRNw9a7oWKZu8tWdvxFnjIpzQlM/s320/Cute-Cat-Happy-Mothers-Day-Special-Picture.jpg" width="320" /></a></div>
இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது .முன்<br />
பின் தெரியாத வெள்ளைக்காரார்கள் கூட அந்தத் தாயின் நிலை கண்டு<br />
பரிதாபப் படும்போது எம்மிலும் சிலர் இப்படியும் இருக்கின்றார்களே<br />
என்று .இப்போது சொல்லுங்கள் தாயென்று வந்தால் எந்த இனத்திற்கும்<br />
தனிப் பாசம் பொங்கி வழியும் இல்லையா?...இதற்க்கு மேலும் நாம்<br />
எதையாவது கற்றுக் கொள்ள நினைத்தால் இந்த ஐந்தறிவு யீவன்களே<br />
போதும் .எங்கள் அகக் கண்களைத் திறந்து விட .பெற்ற தாய் தந்தையை<br />
பேணிப் பாது காக்காத பிள்ளைகள் எந்தக் காலத்திலும் மகிழ்ச்சியாக<br />
வாழ இயலாது என்பதுதான் என் எண்ணக் கருத்து.<br />
.<br />
டிஸ்கி :இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள் அன்பு உறவுகளே .<br />
மிக்க நன்றி வரவுக்கு .</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6191261948672668670.post-45816783153562145392012-08-18T15:58:00.000-07:002012-08-24T01:19:21.890-07:00இது அன்பு உள்ளம் விடும் தூது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPl1iY8M57uE7isnevpjnMd29F3hSAqZPPU3bj5hXYVcaYPnsck7Zurz7065iiGuLoO933PfOt_fQVgY3fZ99XrKq4m7RuHVqZD2qDmFFZU8Fy8WYd9Sk25Cyt6cEMZ7zPpoTnUnc6-_Zc/s1600/40782-i-love-u-animation.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPl1iY8M57uE7isnevpjnMd29F3hSAqZPPU3bj5hXYVcaYPnsck7Zurz7065iiGuLoO933PfOt_fQVgY3fZ99XrKq4m7RuHVqZD2qDmFFZU8Fy8WYd9Sk25Cyt6cEMZ7zPpoTnUnc6-_Zc/s1600/40782-i-love-u-animation.gif" /></a></div>
எண்ணங்களில் பல வர்ணங்கள் கலந்து<br />
நல் இதயங்கள் மகிழ புது கதைகள்தான் தந்து<br />
உறவென்னும் பாலம் இணைத்திட வந்தேன்<br />
தமிழோடும் தமிழ் பேசும் நல் உறவுகளோடும்<br />
<br />
இனி இந்த இல்லம் இது உங்கள் உள்ளம்<br />
மனம்போல (நற்) கருத்து மலரட்டும் என்றும்<br />
புதிய வாசல் திறந்து வைத்தேன் அங்கே<br />
பூவை மட்டும் மலர விட்டேன் !!!............<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/2vZg0opSnEI?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />
<br />
இனிய நட்பு தொடரட்டுமே எம்<br />
இதயம் அதனால் மகிழட்டுமே!......<br />
வருக வருக உறவுகளே உங்கள்<br />
வரவுக்காக காத்திருக்கிறேன்!!........</div>
அன்பு உள்ளம் http://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.com5